விரலினை உதறிக் கொண்டிருந்தார்.
"ஏ...என்னாச்சு?" என்று விரைந்துச் சென்று அவரது விரல் பற்றி பார்த்தார் சூர்ய நாராயணன். சூடுக்கண்ட இடமே கண்ணிப் போயிருந்தது.
"பார்த்துச் செய்யக்கூடாதா?" என்று அக்காயத்தினை ஊதினார் அவர். ஏனோ அவரிடத்திலிருந்து விலக மறுத்தன மதுமதியின் விழிகள்!
"சின்னக்காயம் தான்!" சட்டென தன் கரத்தினை விடுவித்துக் கொண்டார் அவர். அந்த விலகலைக் கண்டவர் வேண்டுமென்றே மீண்டும் அவர் கரம் பற்றி அக்காயத்தினைத் தண்ணீர் கொண்டு அலசினார்.
"எப்படி இருக்காங்க எல்லாரும்?" என்ற குரலில் ஒரு ஏக்கம் தொனித்தது.
"ம்...சின்னவன் தான் ஆபிஸ் போக அடம் பண்றான். போய் நாலு போடு போட்டுட்டுத் தான் வரேன்!" என்றார் அவர்.
"விசேஷம் எதாவது இருக்கா?" என்றார் மறைமுகமாக! அதற்கு சில நொடிகள் மௌனித்தவர்,
"மாமியார் தானே கேட்க முடியும்? சிவன்யா எப்படியும் உன்கிட்ட முதலில் சொல்லுவா.." என்றார் சிறுப்புன்னகையுடன்! காயத்தின் வீரியம் சற்றே தணிந்ததனை உணர்ந்தவராய் அவரது கரத்தினை விடுவித்தார் சூர்ய நாராயணன்.
"எல்லாமே சீக்கிரம் மாறிவிடும் கவலைப்படாதே!" ஆறுதல் மொழி கூறியவர், அன்போடு அவரது நெற்றியில் தனது இதழினை ஒற்றினார். காலங்கடந்து கிட்டிய காதல் என்ற போதிலும் அதன் சுவை நேற்றுக் கனிந்த மாங்கனியாய் சுவைக்க, கண்ணீருடன் தன் காதலுக்கு உரியவரை இறுக அணைத்துக் கொண்டார் மதுமதி. காலங்கொண்ட காதலின் சரித்திரத்தினைத் காலச்சுவட்டில் குறிப்பெடுத்துக் கொண்டு கணக்கினை மூடி வைத்தான் காலத்தேவனும்!!
முற்றும்!
Go to Uyiril kalantha urave story main page
{kunena_discuss:1149}