மேல் அமர்ந்திருந்தார் அவர் கொட்டும் மழை என்றும் பாராமல்! அன்றுத் தர்மாவை உயிரோடு எரிக்க முனைந்த அதே இடமது! ஒரு வழியாய் அப்போதுத் தான் மூச்சே வந்தது அவருக்கு!
"மது..!" குரல்கொடுத்தவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர்.
"மது!" எப்படியும் சங்கடநிலையே விளையும் என்ற எண்ணத்தில் நெறுங்கி அவரதுத் தோளினைத் தொட்டவருக்கு, மௌனத்தையே பதிலாக நல்கினார் அவர். உடைந்துப் போய் சூர்ய நாராயணனை நிமிர்ந்து நோக்கியவரின் விழிகளில் கலக்கத்தினை முதன்முறையாக கண்டார் அவர்.
"அவன் ஏதோ தெரியாமல் பண்ணிட்டான். நீ வா! அவனை சமாதானம் பண்ணிக்கலாம்!" என்று அவரை அழைக்க முயல, அவரோ விரக்தியோடு அமர்ந்திருந்தார்.
"அவன் சொன்னது சரிதானே! தர்மாவோட நிலை என்னன்னு இப்போத் தான் எனக்குப் புரியுது! நான் உங்க வாழ்க்கையில வந்திருக்கக் கூடாது. அதோட தண்டனையை அனுபவித்துட்டேன். நான் தப்பானவள் தான்! ஆனா, மானங்கெட்டுப் போய் மறுபடியும் என்னால அங்கே வர முடியாது. இதெல்லாம் நான் செய்த பாவத்தோட பலனா ஏற்றுக்கிறேன்." என்று கதறி அழுதார் அவர்.
"பைத்தியம் மாதிரி பண்ணாதே! நடந்ததை பற்றி பேசி எந்தப் பயனுமில்லை. அதர்வ்வைப் பற்றி யோசித்தாயா?" மனமாற்றம் புரிய முனைந்தார் அவர்.
"அவனுக்கு ஒரு அழகான குடும்பம் இருக்கு! இத்தனை வருடமா நான் அவனைத் தப்பா வளர்த்தேன்னு தெரியும். இனிமே, நீ அவனை நல்லா பார்த்துப்பேன்னும் தெரியும்! அசோக்கிட்ட நான் மன்னிப்புக் கேட்டேன்னு கேளு.! சிவன்யாக்கிட்ட கூட கேட்டேன்னுக் கேளு! நான் போறேன். செய்த பாவத்துக்கு இனியாவது பிராயசித்தம் தேடுறேன்." என்றார் கண்ணீர் மல்க!
"ஏ...புரியாமல் பேசாதேடி! என்னைப் பற்றி யோசித்தாயா? நான் உன்னைக் கட்டிக்கிட்டவன்! தயவுசெய்து திரும்ப வா! தர்மா மாதிரி நீயுமே என்னைத் தண்டிக்காதே!ப்ளீஸ்.." நொறுங்கிப் போய் அழுதார் அவர். சில நொடிகள் சிறு புன்னகையோடு சூர்ய நாராயணனை நோக்கினார் மதுமதி.
"தர்மா உனக்கு எப்படி காதலிக்கணும்னு சொல்லிக் கொடுத்திருக்கா! எனக்கு இந்த வார்த்தையே போதும். மறுபடியும் காலம் பின்னோக்கி ஓடாதான்னு தோணுது சூர்யா! நான் நிச்சயமா நீ இங்கே வருவதற்கு முன்னாடி உன்னைத் தடுத்திருப்பேன்." என்றவர் அவரது நெஞ்சத்தில் கரம் பதித்தார்.
"இந்த இடத்தை நான் எனக்கு மட்டும் சொந்தமாக்கி இருந்திருப்பேன்." என்றதும் மனம் உடைந்துப் போனது அவருக்கு!
"நான்...உன்னைக் காதலித்தது உண்மை! அதனால தான் எங்கே தர்மா உன்னை என்கிட்ட இருந்துப் பறித்துவிடுவாளோன்னு அப்படி பண்ணேன்." என்றுப் பெரிய இடியை இறக்கினார் அவர்.
"அதர்வ்க்கு தன்னுடைய அப்பா யாருன்னு சந்தேகம் வந்திருக்கும். அது எனக்குமே தெரியாது..! பிகாஸ்...ஐ வாஸ் ரேப்டு!" அத்தனை ஆண்டுகளாய் தன்னுள்ளே பொதித்து வைத்திருந்த