(Reading time: 22 - 43 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

"உனக்கு மட்டுந்தான் அவர் மேலே உரிமை இருக்கு! நான் ஒண்ணும் அவருடைய பையன் இல்லை. என்னுடைய அப்பா யாருன்னு கூட எனக்குத் தெரியாது! நான் ரொம்ப தப்பான வாழ்க்கை வாழ்ந்துட்டேன்னு எனக்குத் தெரியும்! பணம், சொத்து இவ்வளவுத்தான் வாழ்க்கைன்னு முடிவு செய்திருந்தேன். ஆனா, இன்னிக்கு என்கிட்ட எல்லாம் இருக்கு, ஆனா எனக்குன்னு யாருமே இல்லை! வாழ்க்கையே தொலைத்துவிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்.ஒரு வகையில எனக்கு உன் மேலே பொறாமையா இருக்குத் தெரியுமா! ஏன் எனக்கு மட்டும் உன்னை மாதிரி ஒரு அம்மா கிடைக்கலை?" என்ற மொழிகளைக் கேட்டவன் ஆடிப் போனான். அவ்வார்த்தைகளே பறைச்சாற்றியது மதுமதியின் மேல் அவன் எவ்வளவு அன்பினை வைத்திருந்தான் என்று! அவன் முன் அனைத்துத் துரோகங்களும் வெளிப்பட்டு விட, அதனை ஏற்க இயலாமல் தவிக்கிறான் என்பதுத் தெளிவாகவே விளங்கிற்று அவனுக்கு!

"பைத்தியக்காரன் மாதிரி பேசாதே! அதர்வ்!" சற்றே கடுமையாக சாடினான் அசோக்.

"என் அம்மா மட்டும் வராமல் இருந்திருந்தால், நீ சந்தோஷமாக இருந்திருப்ப தானே! அன்னிக்கு, இரண்டு பேரையும் பிரித்த பாவம் தான் இன்னிக்கு நான் யாருமே இல்லாமல் இருக்கேன் போல!" அவன் குரல் அடைத்தது. ஆழ்மனதில் அவனது அன்பிற்கானத் தேடல் எவ்வளவுத் தீர்க்கமானது என்பதுத் தெள்ளத் தெளிவாய் விளங்கிற்று மூத்தவனுக்கு!

"இது நீ இருக்க வேண்டிய இடம்! நான் எங்கேயாவது போறேன், என்னை என் வழியில விட்டுவிடுங்க!" என்றான் விரக்தியோடு!

"எங்கேடா போக போற? சொல்லு..எங்கே போக போற? போய் சாகப் போறீயா?" என்றான் பொறுமையிழந்தவனாய்!

" அதை கேட்க நீ யாருடா?" என்றான் கசப்பானப் புன்னகையோடு! அப்புன்னகையில் அவ்வளவும் வலிகள் மட்டுமே நிரம்பியிருந்தது. கோபத்தின் உச்சத்திற்கே சென்றவனாய், அவனது சட்டையினை இறுகப் பற்றியவன்,

"நான் உன் அண்ணன்டா!" என்று அவன் வினாவிற்கான விடையினை நல்கினான் அசோக். சட்டென அந்த அறைக் கதவுத் திறவப்பட, உள்ளே பதற்றமாக நுழைந்த சிவன்யா அவர்கள் இருந்த கோலத்தினைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள். சூழ்நிலை உணர்ந்தவனாய் அதர்வ்வை விடுவித்தவன், அவனை முறைத்தவண்ணமே அவளிடத்தில் சென்றான். தாங்கி வந்த செய்தியை அவனுக்கு மட்டும் கேட்கும்வண்ணம் பதற்றமாக அவள் உரைக்க, அவன் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் படர்ந்ததை கவனித்தான் அதர்வ்.

"வெளியே வந்துவிடாதே!" எச்சரித்துவிட்டு கதவை மூடிவிட்டு சென்றான் அசோக்.

பதற்றமாக வெளியேறியவனின் பார்வையில் கீழே ஆக்ரோஷமாக சூர்ய நாராயணன் மதுமதியிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.