(Reading time: 25 - 50 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"ஏன்பா அந்த குடிகாரனாக தேடுறீங்க?. எதுவும் பிரச்சனையா?" என்று அந்த பாட்டி கேட்க…

" அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அவனிடம் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டுமென்று வந்தோம். அவனுடைய வேலை விஷயமாக…" ரஞ்சன் உண்மைமை மறைத்து சொன்னான்.

" அவன் சும்மா சுத்திக்கிட்டு இருந்தான். வேலைக்கு போகாம இருந்தானே... இப்பதான் இன்னிக்கு காலங்காத்தால கார்ல ரெண்டு மூணு பேர் வந்தாங்க. அவங்க கூட சேர்ந்து கிளம்பிட்டான். ஏதோ டூர் போறாங்க போல... எதிர்ல இருக்கற கடையிலதான் சிப்ஸ்... ஊறுகாய் பாட்டில் வாங்கிட்டு போனாங்க. எங்க போக போறான்க?. எங்காவது கொட்டமடிச்சிட்டு ரெண்டு நாள் கழிச்சு திரும்பி வருவான். அப்ப வந்து பார்த்துக்கோங்க" என்று பாட்டி சொல்லவும்... ரஞ்சன் பதட்டத்துடன்,

" பாட்டி ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவனை நாங்கள் எவ்வளவு விரைவாக தொடர்பு கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு நல்லது. நீங்கள் அவன் வரவும் எனக்கு செய்தி தெரிவிக்க முடியுமா?. என்னுடைய அலைபேசி எண்ணை தருகிறேன்" என்றான்.

"எனக்கு போன் பண்ண தெரியாது. பார்… நீ ஒன்னு பண்ணு… அந்த கடைக்காரன்ட்ட கொடுத்துட்டு போ… அவன் உனக்கு சொல்லிடுவான். " என்று மாற்று வழி சொன்னார். அவர் சொன்னபடியே கடைக்காரரிடம் விவரத்தை தெரிவித்து விட்டு காரில் ஏறி கிளம்பினார்கள். அலுவலகத்திற்கு வந்து மீண்டும் சோர்வுடன் அமர்ந்தனர்.

"என்ன சத்தியன்.. மீரா விஷயம் ஆரம்பிக்கவே முடியாமல் போய்க்கிட்டே இருக்கு. இந்த பரத்தை பிடிச்சா கண்டுபிடித்து விடலாம் என்று திட்டம் போட்டால்… அவன் எங்கே போய் தொலைந்தான் தெரியவில்லையே.. அதுவரை நாம வெயிட் பண்ணியே ஆகணுமா?" என்று ரஞ்சன் அலுத்துக்கொண்டான்.

அப்பொழுது சத்யனின் அலைப்பேசி ஒலித்தது. அதை எடுத்து பேசிய சத்யனின் முகம் ஆச்சரியத்தில் விகசித்தது.

" என்ன நீ சொல்றது உண்மையா?. " என்றான். தொடர்ந்து,

"ரொம்ப நல்லது. கேசவ்… உன்னை உடனடியாக பார்த்தே ஆக வேண்டும். எனக்கு நீ முக்கியமான ஒரு உதவி செய்ய வேண்டும்."

"----"

" சரி நான் உனக்காக மாலை காத்திருக்கிறேன்" என்று சொன்னான்.

தொலைபேசியை வைத்துவிட்டு ரஞ்சனிடம் அவன் ஒரு உத்வேகத்துடன் பேச

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.