நம்முடைய பலவீனம்தான் நம்மை அழிக்கும்…" என்று மெல்லிய குரலில் சொல்லியபடி சைக்கிளில் ஏறி மிதித்து தன் வீடு நோக்கி செல்லலானாள்….
"ஹே… கால் ஹர்… இங்கே இவ்ளோ பெரிய பிரச்சினை நடந்திருக்கு. அந்த பொண்ணோட ஸ்டேட்மென்ட் வேணும்" என்று கேசவன் கத்த…
"ஐயா… அவங்க என்னை காப்பாத்திட்டாங்க. உங்களுக்கு என்ன எழுதி தரணுமோ நான் எழுதி தரேன். இவன்க மேல நடவடிக்கை எடுங்க. அவங்களை இதுல சேர்க்காதீங்க" என்று கல்பி கெஞ்சினாள்.
"கரெக்ட் கேசவ். அவங்க எங்களோட பக்கத்து வீடுதான். நல்ல ஃபேமிலி. லீவ் ஹர்… அப்புறம் இவன்தான் நாம தேடிக் கொண்டிருந்த பரத்… தானா வந்து சிக்கிட்டான்." என்று ரஞ்சன் விளக்கினான்.
"வெல்… அது அப்படினா நாம மேனேஜ் பண்ணிக்கலாம். இந்த பரத்தை நான் பார்த்துக்கறேன். இன்னிக்கு நைட்டுகுள்ள உனக்கு உண்மை தெரிஞ்சிடும்" என்றவன்.. நான்கு பேரையும் அவர்கள் சட்டையை கொண்டு பின்பக்கம் கைகளை கட்டினான்.
"பொண்ணுங்கன்னா என்னடா நினைச்சிட்டீங்க… செம்மையா வாங்கி கட்டிக்கிட்டீங்களா?" என்றபடி அவன் பங்குக்கு அடிக்க கையை ஓங்கினான்.
"சார்… நீங்க எவ்ளோ வேணும்னாலும் அடிச்சுக்கோங்க… ஆனால் உடம்புல முள் குத்தியிருக்குல்ல அதை எடுத்துட்டு அடிச்சிக்கோங்க… குடையுது… ரொம்ப வலிக்குது…" என்று அலறினார்கள்.
"போலீஸ் அடி வாங்க சாய்ஸ் கேட்கறான்க பார்" என்று சிரித்த கேசவன் கல்பனாவை பார்த்து,
"தேவைன்னா உன்னை கூப்பிடறேன். அந்த பொண்ணு சொன்ன மாதிரி இதையெல்லாம் தைரியமா ஃபேஸ் பண்ண கத்துக்கோ.." என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
"வீட்டுக்கு வரலையா கேசவ்" சத்யன் கேட்டான்.
"இந்த பார்சலை பிரிச்சு மேயணும்ல… இப்ப ஸ்டேஷனுக்கு கொண்டு போறேன். சன் டே வீட்டுக்கு வர்றேன்பா" என்றான்.
"இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணனும்… போலீஸ் ஜீப் வரணும்" சத்யனிடம் விளக்கினான். தரையில் துப்பட்டா சுற்றி கிடந்த கேக்டஸ் செடியை பார்த்தவன்...
"யார் அந்த பொண்ணு?. ரொம்ப போல்ட்… பிரமிக்க வச்சிட்டா" சிலாகித்தான்.
சத்யனை பொறுத்தவரை 'பிரமிப்பு' என்ற வார்த்தைக்கான முழு அர்த்தத்தை இன்றுதான் உணர்ந்தான். ரோஜா மாலை போல… நேற்று பிறந்த பூனை குட்டி போல… பஞ்சு