பாடுகிறாள். அவளுக்கு இந்தியும் தெரியுமா?... அந்த பாடலின் மென்மை மனுவை உறங்க பண்ணுமா…?
ஆனால் அந்த பாடல் அவனுக்குள் உறங்கிய மீராவின் நினைவை எழுப்பி விட்டது. அது அவனுடைய விருப்ப பாடல். அந்த பாடல் அது சுமந்திருக்கும் சோகம்... வலி அவன் ஆழமாக உணர்ந்திருக்கிறான்.
'என்னை விட்டு தொலைந்து போன உன்னை தேடி… உன்னுடைய காலடிகளை பின்தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறேன்… அந்த பாதை மிக நீண்ட தொலைவிற்கு என்னை அழைத்து செல்கிறது… அந்த பாதையின் இறுதியில் எனக்காக நீ காத்திருப்பாய்… உன்னை சேரவும் என் பயணம் அத்துடன் முடிந்து விடும்…'
(கிட்டதட்ட இதுதான் அர்த்தம்… அங்கங்கே ஒரு புரிதலுக்காக கூடுதல் வார்த்தைகளை சேர்த்திருக்கிறேன்.)
'ஆம்… மீரா… நான் உன்னை தேடிக் கொண்டே இருக்கிறேன்… என்னை விட்டு நெடுந்தொலைவு நீ சென்றிருந்தாலும் உன்னிடம் நிச்சயம் ஒருநாள் வந்து சேருவேன்…' அவன் உறக்கம் வர கண்களை மூடினான்.
அதே சமயம் நாகர்கோவிலில் இருந்த ஜெமி உறக்கத்தை தொலைத்து விட்டிருந்தான். எதிரே இருந்த கம்ப்யூட்டரை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். எவ்வளவு பெரிய ரகசியம்… இல்லை… இல்லை… எவ்வளவு பெரிய தவறு…! அதனை சரி செய்யும் பொறுப்பை அவனை நம்பி அங்கிள் ஒப்படைத்திருக்கிறார். அது அவருடைய கடைசி ஆசையாகவும் இருக்கிறது… ஜீஸஸ்… எனக்கு எப்படியாவது உதவுங்கள்…!
சிலுவையிட்டு பிரார்த்தித்தான்…
தொடரும்
Next episode will be published on 15th Sep. This series is updated weekly on Tuesday evenings.