அடித்தாள். அவன் ஓய்ந்து தரையில் சாய்ந்தான். ரேச்சலின் ஆவேசத்தை பார்த்த மற்றவர்கள் பயந்து நின்றனர்.
"டேய்… பரத்து… அவ பேயடி அடிக்கறாடா… மாட்டிக்காதே… எந்திரிச்சு வாடா… ஓடிப் போயிடலாம்" என்று கத்தினார்கள். அவர்கள் சொன்னதை அவன் செயல்படுத்தும் முன்...
ரேச்சலின் கோபம் அவளுடைய முகத்தை ரத்த சிவப்பாக்க… அதே கோபம் குரலையும் சிங்கத்தின் சீற்றமாக மாற்றியது. அருகிலிருந்த பாறாங்கல்லை தூக்கி எடுத்து உயர்த்தி பிடித்தபடி மல்லாந்து விழுந்திருந்த அவனுடைய நெஞ்சின் மீது ஏறி நின்றாள்.
கல்லின் கனமோ… அந்த பெண்ணின் கனமோ… அல்லது பெண்ணுக்குள்ளிருந்த உக்கிரத்தின் கனமோ… கோபம்கூட கனப்பொருளாக மாறுமோ…?.
மொத்தமும் சேர்ந்து மலை கனமாக மாற… அவனால் அசையவும் முடியவில்லை… மூச்சுவிடவும் முடியவில்லை… நெஞ்சுகூடு உடைந்து விடுமோ என்று திகிலானான்.
"ஏ...ஏய்ய்…! பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரமா… என்ன வேணாலும் செய்வியா… எத்தனை பேர் வாழ்க்கைய அழிச்சிருக்கடாஆஆஆ?" கர்ஜித்தாள்.
"ஆ… ஆ… என்… வி...ட்டு..டு" அவனுடைய வார்த்தைகள் திக்கின.
"ஏண்டா… நீ நினைச்சா அப்பாவியோட வாழ்க்கையை அழிப்பியா?... நீ என்ன சாத்தானா… உன்ன உயிரோட விட்டா… இன்னும் நிறைய பேரை அழிப்ப... உனக்கு தண்டனை மரணம்தான்.." அவள் மூச்சிறைக்க… கையிலிருந்த கல்லை உயர தூக்கினாள். அதை பார்த்தவன் அலறினான்…
"என்னை மன்னிச்சிடு மா…" என்று முழு பலத்தையும் திரட்டி கத்தினான்… அவனால் அது மட்டுமே செய்ய முடிந்தது… அவளுடைய காலடியில் இருந்து விடுவித்து கொள்ள முடியவில்லை…
"அழகான வாழ்க்கைய அழிச்சிட்டியேடா…" கத்தினாள். அவள் விழிகள் சிறிதும் கருணை காட்டவில்லை… கண்களை இறுக மூடி… ஆவேசத்தின் முத்தாய்ப்பாக ஆ… என்று கூச்சலிட்டு அவள் கையிலிருந்த கல்லை நழுவவிட...
அவ்ளோதான்… இத்துடன் கதை முடிந்து விட்டது… என்று நினைத்தவன் கத்தவும் மறந்து பேச்சு மூச்சற்று போகும் தருணத்தை திகிலுடன் கண்ணை மூடி எதிர்பார்க்க..
சட்டென அந்த கல்லை இரண்டு கைகள் தாங்கி பிடித்தன…!
அவனுடைய மரண ஓலத்தை கேட்க காத்திருந்த செவிக்கு மரக்கிளைகள் அசையும் ஓசை மட்டும் கேட்க கண்களை திறந்தாள். காலடியின் கீழிருந்தவனுக்கும் அதே சந்தேகம் போல… அரைக்கண்ணில் பார்த்தான்… அந்த கல் எங்கே?
அவளிடமிருந்த அந்த பாறங்கல்லை ஏந்தியவன் ஒரு ஓரமாக போடுவது தெரிந்தது. அது