ஆரம்பித்தான்.
" இப்பொழுது பேசியது யார் தெரியுமா?. நம்ம… கேசவ்…. இங்கே டிரான்ஸ்பர் ஆகி வந்துவிட்டானாம். ஏஎஸ்பியாக இன்சார்ஜ் எடுத்திருக்கிறான். சண்டிகரில் இருந்து இன்றைக்குதான் வந்தானாம். அவன் என்னிடம் இப்பொழுதுதான் பேசுகிறான். அவனுடைய உதவி நமக்கு கிடைத்தால் இந்த விஷயத்தை எளிதாக செய்து விடலாம் என்று எனக்கு தோன்றுகிறது. அதனால் அவனை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அவன் இப்பொழுது மூன்று மணிக்கு இங்கே வருவதாக சொல்லி இருக்கிறான். நாம் அவனிடம் மீராவின் விஷயத்தை பேசலாம்"
"சவுண்ட்ஸ் குட்… நாம் இந்த விஷயத்தை டீல் செய்வதைவிட காவல் துறை மூலமாக செய்யும்பொழுது இன்னும் தெளிவாக விரைவாக மீராவை கண்டு பிடிக்கலாம். சத்தி… மீராவை நாம் சந்திக்க போகும் நேரம் வந்து விட்டது." என்று ரஞ்சன் ஆசுவாசமானான்.
இருவரும் மூன்று மணிக்காக காத்திருந்தனர். சரியாக சொன்ன நேரத்திற்கு கேசவன் அங்கு வந்து விட்டான். சத்யன் ரஞ்சனுடைய கல்லூரித்தோழனான கேசவன் ஏஎஸ்பியாக சண்டிகரில் வேலை பார்த்து வந்தான். இப்போது இங்கே மாற்றலாகி வந்து விட்டான். அவன் வரவும் வரவேற்று அமர வைத்த சத்யன் வீட்டு நலனை விசாரித்தான்.
"எல்லோரும் நல்லா இருக்காங்கப்பா… நெக்ஸ்ட் வீக்தான் இங்கே வர்றாங்க. ஆமாம்… அம்மா அப்பா எப்படி இருக்காங்க. பார்த்து ரொம்ப நாளாச்சு"
"அவங்க நல்லா இருக்காங்க." என்றவன் மீராவின் விஷயத்தை விளக்கினான்.
"மீராவின் விஷயத்திலிருந்து இன்னும் நீ வெளி வரவேயில்லை. எனக்கு புரிகிறது… உனக்கு இந்த விஷயத்தில் நான் எப்படி உதவணும்னு சொல்லு."
"அந்த பரத்தை பிடித்து விசாரித்தால் உண்மை வந்து விடும்…"
"நீ விசாரித்தாயா…?"
"இல்லை… அவன் எங்கேயோ ட்ரிப் போயிருப்பான் போல…"
"அவனை பிடித்து…. தர போகிற ட்ரீட்மென்ட்ல அவனுக்கு ட்ரிப்ஸே போட்டுடலாம். ராஸ்கல்… அந்த கல்ப்ரிட்டோட டீடெய்ல்ஸ கொடு" என்று கேசவன் கொதித்தான்.
"தேங்க்ஸ் கேசவ்… என்னுடைய மீரா என்ன ஆனாள்னு தெரியாமல் தவிச்சிட்டு இருக்கேன்."
"ஓகே… போலீஸ் என்கொய்ரில என்ன சொன்னாங்க ..?"
"அவங்க அந்த விபத்துல இறந்துபோன ஏதோ ஒரு இளம்பெண் பாடிய தந்து அதுதான் மீரான்னு எழுதி வாங்கிட்டாங்க… அந்த சமயத்துல சத்யன் மயக்கத்தில் இருந்ததால் நாங்களும் ஒப்புக்கற மாதிரி ஆயிடுச்சு…" ரஞ்சன் விளக்கினான்.