ஸ்ம்ரிதியோடு பேசினாள். அவளை பற்றி நிறைய தெரிந்துக் கொண்டாள், தனம்.
அன்று இரவு, அஜயுடன் ஸ்ம்ரிதியை பற்றி பேசினாள். "அஜய் கண்ணா, ஸ்ம்ரிதி நல்ல பெண்ணாய் இருக்கிறாள், நாங்க இப்போ இங்க வந்திருக்கிறப்போ கல்யாணத்தை முடிச்சுடலாமா?" என்று கேட்டாள்.
"இல்லம்மா, இப்பத்தான் ஆஸ்பத்திரி திறந்திருக்கு, வேலை நிறைய இருக்கு, அது மட்டுமில்லை என்னோட ஷூட் வேற பாக்கியிருக்கு, அவளுக்கும் பி ஜி வேற இருக்கு, அதெல்லாம் முடியட்டும். பிறகு பார்த்துக்கலாம்."
"ஏன் கண்ணா, ரொம்ப வேலையை இழுத்து போட்டுக்கற?"
"சின்ன வயசு தானேம்மா, என்னோட தொழில் வேற பொறுப்பான சேவை, இந்த ஹாஸ்பிடலுக்கு இருக்கிற கடனை அடைக்கணும், அதை சம்பாதிச்சு அடைச்சுட்டா, இல்லாதவங்களுக்கு செய்யாலாம் அம்மா, அதுக்காகத்தான் இன்னும் வர சான்சை ஏத்துண்டு நடிக்கிறேன்."
"அப்பக் கூட, டே அண்ட் நைட் இவ்வளவு ஹார்ட் ஒர்க் பண்றியே கண்ணா!"
"ஹார்ட் ஒர்க் பண்ற வயசுதானேம்மா, இந்த ஹாஸ்பிடல் கடன்ல இல்லாம இருந்தாதான் நான் நினைக்கிற மாதிரி சேவை பண்ண முடியும். "
"சரி பார்த்துக்கோ, நீயே டாக்டர் , இதுக்கு மேல நான் உனக்கு அட்வைஸ் பண்ண முடியாது." என்றாள் தனம்.
அப்துல் அங்கே வந்தான், "என்ன விஷயம், அம்மாவும் மகனும் ஏதோ முக்கியமா பேசிட்டிருக்கீங்க போலிருக்கு ?"
அவர்கள் பேசியதை எடுத்துக் கூறினாள், தனம் .
அவன்,தன் மகனை அனைத்துக் கொண்டு, "லீவ் ஹிம் அலோன், அவன், தானே வளர்ந்த பையன் , அவனுக்குத் தெரியும் எப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு, தனம். நம்ம மாதிரி, தப்பு தப்பான முடிவு எடுக்க மாட்டான். எனக்கு எங்க அம்மி போர்ஸ் பண்ணா மாதிரி நீ அவனை போர்ஸ் பண்ணாத, தனம். எல்லாத்துக்கும் மேல் அவனுக்கு என்ன பெரிய வயசாயிடுத்து? ரைட் சன் ?" என்று கூறிவிட்டு , அஜயிடம் ,
" எப்படிடா இருக்க தங்கம்? நீயே வளர்ந்து , நீயே படிச்சு, நீயே ஒரு ஹாஸ்பிடலையும் திறந்திருக்க, வி ஆர் ரியல்லி ப்ரவுட் ஆப் யு . ஆனா ஒரு வருத்தம், எங்க கிட்டேர்ந்து ஒரு ரூபாய் கூட வாங்கலியேடா தங்கம், உனக்காக எதுவுமே செய்யலியேன்னு வருத்தமா இருக்குடா, இன்பாக்ட் என் மனசு வலிக்கிறது." என்று கண்ணீர் விட்டான்.
"டாட், வாட் இஸ் திஸ்? நோ பீலிங்ஸ் டாட். " என்று தமாஷாக கூறிவிட்டு, தன் அப்பாவை