"பெருமை படு அபு, இந்த மாதிரி குழந்தை யாருக்கு கிடைப்பா, இவன் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு. அதனால் சந்தோஷமா இருங்க, " என்று ஜாஃபர் கூறினார்.
"அபு, இம்ரானையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்லையா?"
"அவன், நிறைய காலேஜுக்கு அப்பளை பண்ணனும், அது முக்கியம் என்று சொல்லிட்டான் வாப்பா, அதான் விட்டுட்டு வந்துட்டோம்!"
"அவனும் வந்திருந்தான்னா, நம்ம குடும்பம் மொத்தமா ஒன்றா இருந்திருக்கலாம். சரி குழந்தைகள் பெரியவர்கள் ஆயிட்டாங்க, ஹ்ம்ம்." என்று ஒரு பெரு மூச்செறிந்தார்.
"அபு, தனம் , நீங்க எப்போ இங்க வர போறீங்க? நாம எல்லாம் ஒரே குடும்பமா இங்கயே இருக்கலாம் இல்லியா? எங்களுக்கும் வயதாகிண்டு போகிறது, நீங்களும் இங்கே இருந்தா, நாங்களும் குழந்தைகளோட சந்தோஷமா இருப்போம் இல்லியா ?"
அவன், தனத்தைப் பார்த்தான் .
"வந்திடறோம் அங்கிள், எங்களுக்கும் இங்க வரத்தான் ஆசை, இப்போ, சிச்சுவேஷன் எப்படி இருக்கு அங்கிள்?"
"அதெல்லாம் ஒன்றும் இல்லம்மா, அதல்லாம் சால்வ் ஆயிடுத்து." என்று ஜாஃபர் கூறினார்.
பிறகு, ஸ்மிரிதியை பற்றி ஜாபரிடம் கூற ஆரம்பிக்கும் போது, அங்கே நிக்கத்தும் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு அங்கு வந்தார், தனத்தின் அருகில் உட்கார்ந்தார். பிறகு அவர்கள் இருவருக்கும் சேர்ந்து விஷயத்தை கூறினாள், தனம். அஜய் வெட்கத்தில் முகம் சிவந்தான். "மாம், இப்ப என்னம்மா அவசரம், இதை பற்றி பேச?"
" அங்கிள், ஆன்டிக்கும் விஷயம் தெரியற நேரம் வந்துடுத்து, அஜய்." அவன் அதற்கு மேல் பேசவில்லை.
"நம்ம அஜய், கல்யாணத்திற்கு ரெடி ஆயிட்டானா ? அவ்வளவு பெரிய பையன் ஆயிட்டானா?" என்று அவன் கன்னத்தை வழித்தார் , நிக்கத் .
"இல்லை அம்மீ, அவன் முடிவெடுக்கட்டும், அவனுக்கு இப்போ கல்யாணம் செய்துக்க வேண்டாமாம். அதனாலே யாரும் அவனை ஃபோர்ஸ் பண்ண வேண்டாம், அவன் முடிவெடுக்கட்டும்!" என்று அப்துல் கூறினான்.
"அதுவும் சரிதான், அவனுக்குத் தெரியாதா, எப்ப கல்யாணம் செய்துக்கணும்னு, அதனால் அவனே முடிவெடுக்கட்டும் ." என்று கூறிய ஜாஃபர், அஜயின் தலையை வருடிக் கொடுத்தார்.
"நான் சொல்ல வந்தது, நம்ம அஜய்க்கு இந்த பெண்ணை பிடித்திருக்கு, அவள் உங்க இனம் இல்லை, அதனாலே உங்களோட அபிப்ராயம் இருக்குமான்னு தான்..."
"நீ என்ன சொல்ற தனம், நீ என்ன இனம்? ஏம்மா இப்படிலாம் பேசற? நீயும் இந்த குடும்பத்தை