இறுக்கமாக அணைத்தான்.
தனத்திற்கும் கண்கள் கரித்தது.
"ஆமாம் கண்ணா,எங்ககிட்ட எந்த ஹெல்ப்பும் கேட்டதே இல்லை, படிக்கச்ச கூட நீயே படிச்சுப்ப, நாங்க ரொம்பவே லக்கி, " என்று அவன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள், கண்ணீரோடு.
"உனக்கு என்ன வேண்டும்னு நீ சொல்லு கண்ணா, நாங்க ஏதாவது செய்யனும்னு பிரியப் படறோம் சொல்லுப்பா?"
"ஒன்னும் வேண்டாம், நீங்க என் லைப்ல கிடைச்சதே பெரிய லக், இல்லேன்னா, என் வாழ்க்கை பிச்சை எடுத்தே போயிருக்குமோ என்னவோ? ஐ அம் லக்கி, இன்னிக்கு நான் டாக்டராகவும், இந்த ஹாஸ்பிடலுக்கு ஓனராகவும், ஒரு சிங்கர், ஒரு ஆக்டர், இதெல்லாம் எவ்வளவு பேருக்கு சாத்தியம்? என்ன புத்தி சாதுரியம் இருந்தாலும் இவ்வளவும் கிடைக்கிறது என்றால், எவ்வளவு பேருக்கு இது கிடைக்கும்? அம் ஐ நாட் லக்கி?"
"இதெல்லாம் ஜாஃபர் அங்கிளாலதான் , இதெல்லாம் நடந்தது." என்றாள் தனம் ஒரு கதறலோடு.
" அம்மா, வாட் இஸ் திஸ், எதுக்கு இப்படி அழற, இப்போ நாம சந்தோஷமாயிருக்கோம். இப்போ எதுக்கு அழணும்? நான் சொல்ல வந்தது இப்போ எனக்கு எல்லாம் கிடைச்சிருக்கு, எனக்கு ஏதாவது இல்லேன்னாத்தான், உங்களை கேட்கணும். பாசத்தைக் கூட குறைவு இல்லாமல் அப்படியே பொழியறீங்க, அதற்கும் எந்த குறைவும் இல்லை, நான் இன்னும் என்ன கேட்டு வாங்கறது, உங்ககிட்டேர்ந்து? "
தனத்தை அனைத்துக் கொண்டான்,அப்துல். "சாரிடா, என்னாலதான் இதெல்லாம்." என்று அவனும் கண்ணீர் விட்டான்.
"டாட், நீங்களுமா? எல்லாம் முடிந்து போன கதை, இப்போத்தான் எல்லோரும் ஒன்றாக நல்லா இருக்கோமே, இப்போ எதுக்கு அழுகை, இது ஹாப்பியா இருக்கிற நேரம்."
"நீ சொல்றது ரொம்ப கரெக்ட் தங்கம்." எல்லோரும் திரும்பி பார்த்தனர், அப்போது ஜாஃபர் அங்கே வந்தார்.
"என்ன எல்லோரும் ஏன் இப்படி சோகமா உட்கார்ந்திருக்கீங்க ? " தனம், அப்துலிடமிருந்து தள்ளி உட்கார்ந்தாள்.
"இல்ல வாப்பா, அஜய் நம்ம கிட்ட ஒன்னுமே கேட்க மாட்டேங்கிறான், அவனுக்கு இது வரையிலும் ஒண்ணுமே பண்ணலியே, குழந்தையிலிருந்தே அவனே சம்பாதித்து, அவனே சுயமா வளர்ந்திருக்கான், எங்க குழந்தைக்கு ஒன்றுமே பண்ணலேன்னு வருத்தமா இருக்கு, வாப்பா."