“நான் கூப்பிடுவேன்னு எக்ஸ்பெக்ட் செய்யலையா அண்ணி? நான் சும்மா தான் பேசலாம்னு நினைச்சேன்... நாளைக்கு வீட்டுக்கு வாங்களேன்...”
ஜோதியிடம் இருந்து வந்த அழைப்பு மஞ்சுவிற்கு அடுத்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது...
“நாளைக்கா? சும்மாவா ஏதாவது ஸ்பெஷலா??”
“ஹ்ம்ம்ம்.... ஸ்பெஷல்ன்னு இல்லை... உங்களுக்கு சர்ப்ரைஸ் இருக்குன்னு வச்சுக்கோங்களேன்...”
“எனக்கு சர்ப்ரைஸா???”
“ஆமா... வரீங்களா??”
“வீக் என்ட்க்குன்னு நான் ஸ்பெஷலா எந்த பிளானும் வச்சு இல்லை ஜோதி... அதனால வரேன்... லஞ்ச் முடிச்சுட்டு வரேன்...”
“காலைலேயே வாங்க அண்ணி...”
மஞ்சு பதில் சொல்லும் முன், அங்கே வந்த சாதனா,
“மஞ்சு, சாப்பிடலாம் வா... யாரோட இப்போ கதை பேசிட்டு இருக்க???” என்றாள் பொறுமை இல்லாமல்...
அவள் சொன்னது ஜோதிக்கும் கேட்டது...
“சாதனா தானே அண்ணி அது... அவளையும் வரச் சொல்லுங்க...” என்றாள் ஜோதி மஞ்சுவிடம்...
“நான் அவக் கிட்ட கேட்குறேன் ஜோதி...” என்ற மஞ்சு, யோசனையுடனே ஜோதியிடம் பேசி முடித்து அழைப்பை துண்டித்தாள்...