“எப்படி இருக்கீங்க...” என்று ஷண்முகம் வழக்கம் போல அவளின் அப்பாவிடம் நலம் விசாரிக்கவும், மஞ்சுவிற்கு ஜோதி எதை சொல்கிறாள் என்பது ஒன்றும் புரியவில்லை...
ஆனால் அவள் அதிக நேரம் குழம்ப வேண்டிய அவசியம் இருக்கவில்லை...
“குழந்தை எப்படி இருக்கான்??” என பிரேம்குமார் விசாரிக்கவும், ‘ஐயையோ, பாவம் ஷண்முகம் என்ன சொல்லி சமாளிக்க போகிறாரோ’ என்று மஞ்சு யோசிக்க, ஷண்முகமோ கூலாக, தன் அறை பக்கம் பார்த்து,
“வினோ... வினோ... இங்கே வா... மஞ்சுவோட அப்பா வந்திருக்கார் பார்...” என்று குரல் கொடுத்தான்...
என்ன செய்கிறான் இவன் என்று மஞ்சு குழம்ப... அடுத்த சில வினாடிகளில், முகமெல்லாம் சிரிப்புடன் வினோதினி கையில் குழந்தையுடன் வந்தாள்...
“எப்படிப்பா இருக்கீங்க?? அம்மா எப்படி இருக்காங்க??? மஞ்சு எங்கே??” என்று வினோதினி கேள்விகளை அடுக்க, மஞ்சு நம்ப முடியாமல் நின்றாள்...
“மஞ்சுவும் ஜோதியும் கிச்சன்ல இருக்காங்க...” என்று நிர்மலா சொல்லவும், குழந்தையை நிர்மலாவிடம் நீட்டினாள் வினோதினி...
“இவனை கையில வச்சுக்கோங்க அத்தை... நான் மஞ்சுவை பார்த்துட்டு வரேன்...”
மஞ்சு மயக்கம் போடாத குறை தான்!!!!
“எப்படி அண்ணி என் சர்ப்ரைஸ்...” என்று ஜோதி கேட்கவும்,
“மஞ்சு...” என்று அழைத்துக் கொண்டு வினோதினி அங்கே வரவும் சரியாக இருந்தது...
“வினோ, வாட் இஸ் திஸ்??? என்ன தான் நடக்குது இங்கே??? டூ வீக்ஸ்ல எப்படி எல்லாம்