சமையலறை பக்கம் வந்தார்கள்...
“கார்த்திக் எப்போ வரான் ஜோதி???” என்று மஞ்சு கேட்கவும், ஜோதியின் முகத்தில் வெட்கமும், குழப்பமும் சேர்ந்து தோன்றியது...
“அவர் எங்கே வரார்???”
“நீ சொன்ன சர்ப்ரைஸ் அது தானே??? நான் வந்ததுல இருந்து கார்த்திக் வரவே இல்லை... நீ இன்னைக்கு ஸ்பெஷலா சர்ப்ரைஸ்ன்னு சொல்லி வர சொன்ன... அதான் அவன் வரான்னு நினைச்சேன்...”
“இல்லை அண்ணி... அவர் இங்கே இல்லை... இப்போ பெங்களூர்ல இருக்கார்... அங்கே இருக்க ப்ராஜக்ட்ல போட்டு இருக்காங்க...”
“ஒ... அது எனக்கு தெரியாதே... அப்போ நீ சொன்ன சர்ப்ரைஸ் என்ன??”
பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்த பக்கம் எட்டிப் பார்த்த ஜோதி,
“கொஞ்சம் நேரம் இருங்க... என்னன்னு உங்களுக்கே தெரியும்...” என்றாள் புதிர் போடுபவளாக...
மஞ்சுவிற்கும் சஸ்பென்ஸிற்கும் ஒத்தே வராது!!!! கதைகள் படித்தால் கூட முடிவை படித்து விட்டு தான் முதல் பக்கத்திற்கு செல்வாள்... அப்படி பட்டவளிடம் ஜோதி புதிர் போடவும், பொறுமை இல்லாமல்,
“என்னன்னு சொல்லு ஜோதி...” என அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, ஜோதி உதட்டில் கை வைத்து அமைதியாக இருக்க சைகை செய்துக் கொண்டே, விரலை நீட்டி சுட்டிக் காட்டினாள்.
அப்படி என்ன கட்டுகிறாள் என்று ஆர்வத்துடன் மஞ்சு பார்த்தால், அங்கே ஷண்முகம் வந்துக் கொண்டிருந்தான்...