(Reading time: 7 - 13 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

“ஜோதி ம்மா... நாளைக்கு அங்கே வரச் சொல்றா... என்னோவோ சர்ப்ரைஸ் இருக்காம்...”

  

“அப்படி என்ன???”

  

“அதான் தெரியலை ம்மா...”

  

“இதுல குழம்ப என்னக்கா இருக்கு... ஜோதியோட ஃபியான்ஸே கார்த்திக் வராரா இருக்கும்... ஜோதிக்கு வேற என்ன சர்ப்ரைஸ் இருக்கும்???”

  

“அட, ஆமாம்... நான் அவனைப் பத்தி கேட்கவே இல்லை...”

  

“சது சொல்ற மாதிரி தான் இருக்கும் மஞ்சு... கார்த்திக்கும் நீயும் ஃபிரென்ட்ஸ்ன்னு ஜோதிக்கும் தெரியும்... அதனால தான் கூப்பிட்டு இருப்பா...”

  

“இருக்கும்... இருக்கும்... சது, உன்னையும் வர சொன்னா... நீயும் வரீயா???”

  

“அன்னைக்கு அந்த வேஸ்ட் கல்யாண பேச்சை நிறுத்தினதுக்காக ஜோதிக்கு நான் நன்றிக் கடன் பட்டு இருக்கேன்... ஆனாலும் அங்கே வந்து என்னக்கா செய்றது??? எனக்கு ரொம்ப போர் அடிக்குமே...”

  

“சாதனா எதுக்கு மஞ்சு... வேண்டாம்... நீ போயிட்டு வா... அப்பாவை கொண்டு போய் விட சொல்றேன்... நாளைக்கு போயிட்டு ஞாயிறு சாயங்காலமா வந்திரு... நீ மனோஜ் வீட்டுக்கு போகவே இல்லைங்குற பேச்சும் வராம இருக்கும்...” என்றாள் பத்மா...

  

மஞ்சுவிற்கும் அது சரி என்று பட்டது... எனவே உடனே ஏற்றுக் கொண்டாள்...

  

றுநாள் பிரேம்குமாரும், மஞ்சுவும் மனோஜின் வீட்டை அடைந்தப் போது ஜோதி தான் அவர்களை முதலில் வரவேற்று உபசரித்தாள்...

  

குரல் கேட்டு வந்த நிர்மலா பிரேம்குமாருடன் பேச்சை தொடர, மஞ்சுவும், ஜோதியும் தனியாக

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.