ஜோதியும் அவளும் முன்பு போல ரெஸ்ட்லிங்’ வீராங்கனைகளாக அடித்துக் கொள்ளவில்லை என்றாலும் இப்போதும் ரொம்ப ‘க்ளோஸ்’ என்றும் சொல்ல முடியாது...! தேவைக்கு பேசிக் கொள்வார்கள்... மஞ்சு அமெரிக்காவில் இருந்து திரும்பியது முதல் ஜோதி முன்பை விட மஞ்சுவிடம் நன்றாக பேச தான் செய்தாள்...
ஆனால், இன்றைய இந்த அழைப்பு மஞ்சு எதிர்பார்க்காதது...
நிர்மலாவே எதுவும் சொல்லவில்லை... ஜோதி வேலை மெனக்கெட்டு அழைக்கிறாளே???
“மஞ்சு!!!! பசிக்குதுடி... வா...” சாதனாவின் உரத்த குரல், மஞ்சுவின் சிந்தனையை கலைத்தது...
“எதுக்கு சது இப்படி கத்துற??? மெதுவா பேசு... உனக்கு அவ்வளவு பசிக்குதுனா, நீ சாப்பிட வேண்டியது தானே???”
“போனா போகுதுன்னு உனக்காக வெயிட் செய்தேன் பாரு... என்னை சொல்லனும்...”
அக்காவும் தங்கையும் வாக்குவாதத்தை தொடர பத்மா அவர்கள் நடுவே வந்து சமாதான முயற்சியில் இறங்கினாள்...
“மஞ்சு, சாதனா, போதும், நிறுத்துங்க... வாங்க சாப்பிடலாம்...”
“நான் ஒன்னும் செய்யலைம்மா... சது தான் காது அடைக்குற மாதிரி அலறுனா...” என்று தங்கையை ‘போட்டுக் கொடுக்க’ முயற்சி செய்தாள் மஞ்சு...
“பின்ன உன் கிட்ட செல்லமா கொஞ்சுவாங்க... எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்...” என்று சாதனாவும் விடாமல் தொடர்ந்தாள்...
“ப்ச்... நிறுத்துங்கன்னு சொல்றேன்ல... யாரு மஞ்சு போன்ல???” என்று விசாரித்தாள் பத்மா.