தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 17 - பிந்து வினோத்
மஞ்சு சென்னை வந்து நான்கு மாதங்கள் ஓடிச் சென்றிருந்தன... இன்னும் மஞ்சுவிற்கு ஏற்றதாக ப்ராஜக்ட் அமையவில்லை.
ஆனால் துர்காவின் உதவியுடன் மஞ்சுவிற்கான விஸா ஏற்பாடுகள் தொடங்கி இருந்தது. ஒரு நல்ல ப்ராஜக்ட் மட்டும் கிடைத்து விட்டால் போதும்...
மனதுக்குள் ஓடிய எண்ணங்களுடன் அலுப்புடனே தன் கம்ப்யூட்டரை ஆன் செய்தாள் மஞ்சு...
அவளுடைய சிஸ்டம் உயிர் பெற்ற உடனே, மஞ்சு ஆஃபீஸ் மெசெஞ்சரை ஓபன் செய்தாள்... இப்போதெல்லாம் முன்பு போல மற்ற இன்டர்நெட் மெசெஞ்சர்கள் தகவல் பாதுகாப்பிற்காக (data security) தடை செய்யப் பட்டு இருந்தது!!! அதனால் யாஹூ மெசெஞ்சருக்கும் அனுமதி இல்லை...
மனோஜ் வேலை செய்துக் கொண்டிருந்த கிளையன்ட் அலுவலகத்திலும் அதே நடைமுறை பின்பற்றப் பட்டதால், மஞ்சு அதைப் பற்றி அதிகம் கவலைப் படவில்லை...
அவளுக்கு எப்படியாவது யூ.எஸ் சென்று மனோஜின் அருகே இருந்தால் போதுமென்ற எண்ணம் ஏற்பட்டு இருந்தது...
மெசெஞ்சரில் மஞ்சுவின் ஸ்டேட்டஸ் ‘ஆன்லைன்’ ஆன உடனேயே, ஒரு சாட் விண்டோ தோன்றியது...
“மஞ்சு, என் க்யூப்க்கு வா...” என்று துர்காவிடம் இருந்து மெசேஜ் வந்தது...
மஞ்சு ஒரு வினாடியும் தாமதிக்காமல், உடனே எழுந்துச் சென்றாள்...
துர்கா எந்த அளவிற்கு அவளுக்காக ப்ராஜக்ட் தேடிக் கொண்டிருக்கிறாள் என்பது மஞ்சுவிற்கும் தெரியும்...
“குட் மார்னிங் துர்கா...” என்று துர்காவின் அருகே சென்று வாழ்த்தினாள் மஞ்சு...