சந்தித்திருக்கிறாள்... அவர்களுக்கு இரண்டு சிறிய வயது மகள்கள் வேறு இருக்கிறார்கள்... புனிதாவிற்கு முப்பத்தி ஐந்து, முப்பத்தி ஆறு வயதிற்கு மேல் இருக்காது... பார்ப்பதற்கும் அப்படி ஒரு அழகு... அப்புறம் எதற்கு இவனுக்கு இப்படி ஒரு கேவலமான புத்தி???
மனதுக்குள் அத்தனை விஷயங்கள் ஓடினாலும், வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் எழுந்து நின்றுக் கொண்டு கௌரவ் உடன் பேசினாள்... அவனின் கேள்விகளுக்கும் பதில் சொன்னாள்...
“கௌரவ் இங்கே இருக்கீங்களா?? ஹாய் மஞ்சு...” என்றபடி அங்கே வந்தான் அவளின் சக ஊழியன் (colleague) அசோக்... தொடர்ந்து,
“நாளைக்கு கெட் டூ கெதர் இருக்கு தானே கௌரவ்? மஞ்சு வரலைன்னு சொல்லிட்டாங்க... நீங்க என்னன்னு கேட்கலையா?” என்றான்.
“அசோக்... உனக்கு ஏன் இந்த வேலை??? எனக்கு நிறைய பென்டிங் வொர்க் இருக்கு...” என்றாள் மஞ்சு அவசரமாக.
‘நோ மஞ்சு, நீ கட்டாயம் வரனும். இப்போ நீ ப்ராஜக்ட் லீட். இந்த மாதிரி கேதரிங்ஸ் வரது அவசியம்...” என்றான் கௌரவ்.
லீட் ஆவது மண்ணாங்கட்டியாவது! என மனதுள் புலம்பிய மஞ்சு, வெளியே மெல்ல புன்னகைத்து வைத்தாள்.
கௌரவ் வீட்டில் நடக்க இருக்கும் கெட் டுகெதர் அது... அதற்கு போவதை பற்றி அவள் யோசிக்க கூட இல்லை... ஏதாவது சாக்கு போக்கு சொல்லி போகாமல் இருந்து விட முடிவு செய்திருந்தாள்... அதைப் பற்றி இந்த ‘ஓட்டை வாய்’ அசோக் இப்படி கௌரவிடமே போட்டுக் கொடுப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை...!!!
தொடர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு,