“ஆதி, குட் மார்னிங். இவன் என்னோட அண்ணன். நான் நேத்து கூட உன் கிட்ட சொன்னேனே?” என அக்ஷரா அறிமுகம் செய்யும் போதே விவேக் நெடு நாள் பழகிய நண்பனை சந்திப்பதுப் போல ஆதித்யாவின் கையை குலுக்கி விட்டு, அவனின் தோளில் நட்போடு கை போட்டுக் கொண்டான்.
“உன்னை பத்தி அக்ஷரா நிறைய சொன்னா ஆதித்யா. வெரி இம்ப்ரசிவ். இதுப் போல டெடிகேட்டட் யங் பீப்பிளை எனக்கு ரொம்ப பிடிக்கும். நைஸ் டு மீட் யூ!”
ஆதித்யா சங்கோஜத்துடன் நெளிந்தான்.
“ஆதி, விவேக் பக்கத்துல எதுக்கு ஷையா பீல் செய்ற? அவன் நமக்கு எல்லா ஹெல்ப்பும் செய்வான். இப்போ கூட சூப்பரா ஒரு ஐடியா கொடுத்திருக்கான். நீ இங்கே தங்கி இருந்தா வேஸ்ட்டா பணம் செலவாகும். என் பெரியம்மா வீடு ரொம்ப பெருசு. உனக்கு அங்கே ஒரு ரூம் ரெடி செய்து தரேன்னு சொல்லி இருக்காங்க. நீ அங்கேயே தங்கிக்கலாம். அப்போ, நீ ப்ரீயா காம்படிஷனுக்கு எல்லாம் செய்யலாம். நானும் உன் கிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம். நீ என்ன சொல்ற?”
ஆதித்யா உடனே முடிவெடுக்க முடியாமல் திணறினான்.
“ஆதித்யா, நீ இப்படி ஹெசிடேட் செய்ய வேண்டாம். எங்க வீட்டுக்கு வந்து பாரு. உனக்கு சௌகரியமா எல்லாம் ரெடி செய்து தர சொல்றேன். தினம் தினம் அக்ஷராவை டிராப் செய்றது, பிக்கப் செய்றது எல்லாம் கஷ்டம் தம்பி. நீ வந்தா எனக்கும் உதவியா இருக்கும்!” என விவேக்கும் அவன் மனதை மாற்ற முயன்றான்.
“நான் எதுக்கும் அக்காவை ஒருத்தடவை கேட்கட்டுமா?” என ஆதித்யா கேட்டதும் விவேக்கிற்கு சந்தோஷம் தாளவில்லை!
தம்பி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்!!!! ஆதித்யாவை மனதார மெச்சிக் கொண்டான்!