(Reading time: 9 - 18 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

  

“நான் ஒன்னும் கிடையாது சார். அக்கா கிரேட் தான். அது ரொம்ப உண்மை!”

  

“என்னை சார்ன்னு கூப்பிடாதே, விவேக்ன்னு கூப்பிடு போதும். உன் அக்கா பாசம் என்னை புல்லரிக்க வைக்குது. உன் அக்கா சொல்ற வரைக்கும் வெயிட் செய்வோம், இன்னும் டைம் இருக்கு! நோ ப்ராப்ளம்ஸ்”

  

விவேக் தொடர்ந்து ஆதித்யாவுடன் பேசிக் கொண்டிருக்க, பத்து நிமிடங்களுக்கு முன்பே சான்வியிடம் இருந்து அழைப்பு வந்தது.

  

“ஆதி, அக்ஷரா பெரியம்மா கிட்ட பேசினேன். நீ அவங்க வீட்டுல தங்குறதுல எந்த தொல்லையும் இல்லைன்னு சொன்னாங்க. உனக்கு பிடிச்சிருந்தா போ!”

  

“சரிக்கா, நான் போறேன். ஹோட்டல் விட வசதியா தான் இருக்கும்.”

  

“அவங்களுக்கு கூடுதல் வேலை இல்லாமல் பார்த்துக்கோ!”

  

இதற்கு ஆதித்யா பதில் சொல்லும் முன் அக்ஷரா குறுக்கிட்டாள்.

  

“ஒரு வேலையும் இல்லைக்கா. அப்படியே இருந்தாலும் வேலைக்கு நிறைய பேர் இருக்காங்க. ஆதி ராஜா மாதிரி இருக்கலாம். முக்கியமா காம்படிஷன்ல முழுசா கவனம் செலுத்த முடியும்!”

  

“புரியுது. ரொம்ப தேங்க்ஸ் அக்ஷரா. ஆதித்யா தனியா இருக்கானேன்னு கவலையா இருந்தது. இப்போ அந்த கவலை குறைஞ்சிருக்கு.”

  

“தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு அக்கா? அப்படியே நீங்க தேங்க்ஸ் சொல்லனும்னா கூட என் அண்ணன் விவேக்குக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும்!”

  

அக்ஷ்ராவின் பின்னே நின்று சான்வியையே பார்த்துக் கொண்டிருந்த விவேக், அவன் தான் அவள் சொன்ன அண்ணன் என்று காட்டுபவனைப் போல கையை அசைத்தான்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.