“என்னடா அந்த போட்டோவை கவனிச்சீயா?”
“யெஸ், நீ சொல்றது சரி! போட்டோல தெரியுற சிகரெட் துண்டு பத்தி ஸ்பாட்ல கலக்ட் செய்த லிஸ்ட்ல இருக்கு. ஆனால் எந்த இன்வெஸ்டிகேஷனிலும் அதைப் பத்தின விபரம் இல்லை...”
“மே பீ இது முக்கியமில்லாத விஷயமா கூட இருக்கலாம்... பார்ப்போம்...! சரி, நாளைக்கு காலையிலேயே செவ்வந்திபுரம் கிளம்புவோம் வினோதன்... அங்கே நிறைய பேர் கூட பேச வேண்டி இருக்கு. நாளைக்கே அது எல்லாம் முடிச்சிட்டா, கேஸை ரீ-கன்ஸ்ட்ரக்ட் செய்ய ஈஸியா இருக்கும்.”
“ஓகே தேன், நாளைக்கு போகலாம்!” என வினோதனும் ஆமோதித்தான்.
*****************
மறுநாள் காலையிலேயே வினோதனும், தென்றல்வாணனும் ஒன்றாக செவ்வந்திபுரம் கிளம்பினார்கள்.
அங்கே இருந்த ராஜசுலோசனாவின் பெரிய மாளிகையை அடைந்தார்கள். கிட்டத்தட்ட பத்தடி உயர இரும்பு கேட் ஒன்று அவர்களை வழி மரித்தது. கேட்டிற்கு வெளியே இருந்து பார்த்த போதும் கூட, அந்த பங்களா கம்பீரமாக தெரிந்தது.
ராஜ பரம்பரை, பணக்காரர்கள் என்றெல்லாம் கேள்வி பட்டிருந்த போதும், அந்த பங்களாவின் தோற்றமும், சுற்றுப்புறமும் அவர்கள் இருவரையும் மலைக்க வைத்தது.
“என்ன ஒரு அழகு!”
“யெஸ்... அழகா தான் இருக்கு...”
இருவரும் பங்களாவின் அழகில் ஆழ்ந்திருக்க செக்யூரிட்டி உடை அணிந்த ஒருவன்