(Reading time: 10 - 20 minutes)
Inspector Then
Inspector Then

சுத்தி இருக்க காம்பவுண்ட்ல நாலு கேட் இருக்கு... அந்த பூட்டை திறந்து யாரவது வந்தாலோ போனாலோ எனக்கு தெரியாது சார்.

  

வெறும் லேடீஸ் தான் இருந்தாங்கன்னு சொல்றீங்க, இவ்வளவு கேர்லஸ்ஸாவா உங்க அம்மா இருந்தாங்க?”

  

இல்லை சார்... அந்த பக்கம் செக்யூரிட்டி இல்லாம இருக்கலாம். ஆனால் நாய்ங்க இருந்தது சார்...

  

நாய்ங்களா?”

  

ஆமாம் சார், இப்போவும் இருக்குங்க... பத்து அல்சேஷன் நாய்ங்க... கடிச்சுதுன்னு வைங்க அந்த சதை அவ்வளவு தான்... அதுங்களை எப்போதும் ப்ரீயா விட்டிருப்பாங்க... தெரியாம எவனாவது வந்தால் அதோ கதி தான்...

  

ஓஹோ... இந்த நாய்ங்களை பொதுவா யார் கண்ட்ரோல் செய்றது?”

  

அம்மா சார்... சின்னம்மா, திலீப் சார் சொன்னாலும் கேட்கும்ங்க... அப்புறம் வீட்டில அம்மாக்கு துணையா இருக்க ரோசிம்மா பேச்சையும் கேட்கும்ங்க... நானோ மத்த வேலை செய்றவங்களோ தேவை படும் போது ரோசிம்மா கிட்ட இன்டர்காம்ல பேசிட்டு போவோம்.

  

சரி... அப்போ எப்படி நீங்க ரோஹினி இறந்த அன்னைக்கு அவ வீட்டை விட்டு போயிருப்பான்னு நினைச்சீங்க? நாய்ங்களை தாண்டி அவ போக முடியுமா என்ன?”

  

ஹ்ம்ம்ம்... நீங்க கேட்கும் போது தான் தோணுது. அன்னைக்கு காலையிலேயே எல்லா நாய்ங்களும் கட்டி போட்டு இருந்துச்சு... ரோஹினிக்காக அம்மாவோ இல்லை சின்னமாவோ கட்டி போட்டிருப்பாங்கன்னு நினைச்சேன்...

  

தேன்னும் வினோதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

  

சரி மாணிக்கம், கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க... இந்த சம்பவம் நடந்த அன்னைக்கு

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.