அவர்களை நோக்கி வந்தான்.
“யாரு சார் நீங்க? எதுக்கு பங்களா பக்கத்துல நிக்குறீங்க?”
போலீஸ் உடை அணிந்து வந்திருக்காததால், “நாங்க க்ரைம் பிரான்ச் போலீஸ்...” என சொல்லி, இருவரும் தங்களின் ஐ.டி கார்டை எடுத்துக் காட்டினார்கள்.
“திலீப் சார் சொன்னார், நீங்க வருவீங்கன்னு... எப்போ தான் இந்த கேஸ் முடிஞ்சு எங்கம்மாக்கு நிம்மதி கிடைக்க போகுதோ...” என்று புலம்பினான் செக்யூரிட்டி.
“யார் இந்த திலீப்?” என வினோதன் அவனை எடைப் போட்டுக் கொண்டே கேட்டான்.
“எங்க சின்னம்மாவை கல்யாணம் செய்த்துக்கிட்டவர் சார்...”
“ஓஹோ! யாரெல்லாம் இந்த வீட்டுல இப்போ இருக்காங்க?”
“பெரியம்மா, சின்னம்மா, திலீப் சார் மூணு பேர் மட்டும் தான்... அப்புறம் சமையலுக்கு, உதவிக்குன்னு மூணு பொம்பளைங்க இருக்காங்க...”
“நீங்க எவ்வளவு நாளா இங்கே செக்யூரிட்டியா இருக்கீங்க?”
“பதினஞ்சு வருஷம் ஆகப் போகுது சார்...”
“உங்க பேர் என்ன?”
“மாணிக்கம் சார்.”
“உங்களுக்கு சிகரட் பிடிக்குற பழக்கம் உண்டா மாணிக்கம்?”
“இதெல்லாமா சார் கேட்பீங்க?”