“இன்னுமொரு விஷயம் சார்.”
“சொல்லுங்க?”
“இதுவும் இந்த கேஸ் சம்மந்தப்பட்டதான்னு தெரியலை.”
“அதை பத்தி கவலை படாதீங்க என்னன்னு சொல்லுங்க.”
“இந்த பொண்ணு இறந்த நாள்ன்னு இல்லை, அந்த நேரத்துல கொஞ்ச நாளாகவே நேரம் கெட்ட நேரத்துல ஒரு பைக் சத்தம் கேட்கும். ரொம்ப சத்தமா கேட்காது, ஆனால் நான் பொதுவா சின்ன சத்தம் கேட்டாலும் முழிச்சுப்பேன் அதனால தான் என் காதுல விழுந்தது.”
“ஓ...!”
“இதை ஏன் சொல்றேன்னா இந்த சம்பவம் நடந்த பிறகு அந்த பைக் சத்தம் கேட்கவே இல்லை.”
“ஒருவேளை நீங்க கவனிக்காமல் இருந்திருக்கலாம்?”
“இல்லை சார். ரோஹினி இறந்த நேரத்துல மொத்த வீடே களேபரமா இருந்தது. அந்த நேரத்துல எனக்கு எங்கே இருந்து நைட் தூக்கம் வரும். வீட்டுல இருக்கவங்க தான் எனக்கு எல்லாமே அவங்களை பத்திரமா பார்த்துக்கனுமே. கிட்டத்தட்ட ஆறு, ஏழு மாசம் தூங்காமல் உலாவிட்டே இருப்பேன்... அப்புறம் அம்மா தான் அதை கவனிச்சுட்டு இப்படி எல்லாம் செய்யாதே உடம்புக்கு நல்லதில்லைன்னு எடுத்து சொன்னாங்க...”
“அப்படியா! ஆமாம் அந்த பைக் சத்தம் எத்தனை மணி மாதிரி கேட்கும்னு ஞாபகம் இருக்கா?”
“இது தான்னு சொல்ல முடியலை சார், விடிகாலை ஒன்னு, ரெண்டு போல இருக்கும்.”