இருக்குமோன்னு பார்க்க போனேன். தேடினால் எங்கேயுமே அவ இல்லை... ஏதோ தோணவும் அந்த கிணத்துல எட்டி பார்த்தேன் குல நடுங்கி போச்சு சார். பச்சையும் மஞ்சளுமா டிரஸ் தெரிஞ்சது... அது அந்த பொண்ணு தானான்னு தெரியலை ஆனாலும் அலறி அடிச்சிட்டு வந்து சொன்னேன். அப்புறம் திலீப் சார் தான் போலீசுக்கு போன் செய்தார்...”
“திலீப் அன்னைக்கு இங்கே தங்கி இருந்தாரா என்ன?”
“இல்லை இல்லை சார். காலையிலே வந்திருந்தார்.”
“எத்தனை மணிக்கு வந்தார்?”
“ஒரு எட்டு, எட்டரை இருக்கும் சார்.”
“நீங்க ரோஹினி பாடியை கண்டுபிடிச்சது தோராயமா எத்தனை மணிக்கு இருக்கும்?”
“பத்து மணி கிட்ட இருக்கும் சார்...”
“ஓ ஓகே!”
அதுவரை அமைதியாக இருந்த தேன்,
“இந்த வீட்டுக்கு வாட்ச்மேன் நீங்க மட்டும் தான்னு சொல்றீங்க, அப்படி தானே?” எனக் கேட்டான்.
“வாட்ச்மேன்னு சொல்லாதீங்க சார், செக்யூரிட்டின்னு சொல்லுங்க, ஆமாம் நான் மட்டும் தான்.”
“அப்புறம் எப்படி மாணிக்கம், ரோஹினி வீட்டை விட்டு வெளியே போயிருந்தா உங்களுக்கு தெரியாமல் இருக்கும்?”
“அது அப்படி இல்லை சார். இந்த கேட் வழியா வந்து போனா தான் எனக்கு தெரியும். வீட்டை