“இந்த கார், பைக் பத்தி இதுக்கு முன்னாடி விசாரிச்ச போலீஸ்காரங்க கிட்ட சொன்னீங்களா?”
“முதல் முதல்ல வந்து விசாரிச்ச சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் கிட்ட சொன்னேன் சார். அதுக்கு அப்புறம் யாருமே என் கிட்ட வந்து எதையும் கேட்கவே இல்லை. வீட்டுல இருக்கவங்க கிட்ட மட்டும் விசாரிச்சுட்டு போயிட்டாங்க.”
“ஓஹோ! சரி மாணிக்கம், வீட்டுல இருக்கவங்க கிட்ட பேசிட்டு வரோம்.”
வினோதனும், தென்றல்வாணனும் இரும்பு கேட் அருகே போகவும், மாணிக்கம் பதற்றத்துடன் அவர்களை தடுத்தான்.
“இருங்க, இருங்க சார்... தப்பி தவறி காலை உள்ளே வச்சிறாதீங்க நாய்ங்க பிச்சு போட்டுரும், நான் போன் செய்து சொல்றேன், அப்புறம் போங்க...”
“சரி!”
மாணிக்கம் அங்கே இருந்த இன்டர்காமில் போன் செய்ய, தேனும், வினோதனும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
“இந்த இன்பர்மேஷன் ஏதாவது ரிலவென்ட்டா இருக்கும்னு நினைக்குற, தேன்?”
“தெரியலை வினோதன், எல்லாத்தையும் நோட் செய்து வச்சிருக்கேன், மத்தவங்க கிட்டயும் பேசிட்டு அப்புறமா பார்ப்போம்.”
“எனக்கு நாய்ங்க எல்லாம் கட்டி இருந்த விஷயம் தான் க்யுரியஸா இருக்கு.”
“ரைட், வீட்டுல இருந்த மூணு பேருல யாரோ ஒருத்தர் இல்லை திலீப் தான் அதை எல்லாம் கட்டி இருக்கனும்.”
“ஆனால் ஏன்? எதுக்கு நாய்களை கட்டிப் போட்டாங்க?”