“கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுங்க.”
“இல்லை சார் அந்த பழக்கம் எல்லாம் இல்லை... அம்மாக்கு அது போல பழக்கம் எல்லாம் பிடிக்காது...”
“முழு நாள் நீங்க தான் செக்யூரிட்டியா? இல்லை ஷிஃப்ட்ல வேலை செய்றீங்களா?”
“நான் மட்டும் தான் சார். நைட் ஆனால் கேட்டை இழுத்து மூடிட்டு அங்கே இருக்கே அந்த ரூமில படுத்துப்பேன். எனக்கென்ன பிள்ளையா சொந்தமா? யாரும் இல்லை... கேட்டுல செக்யூரிட்டி கருவி இருக்கு சார். கேட்டை யாராவது தொட்டால் இல்லை பக்கத்துல வந்தாலே தானா லைட் எரியும், அலாரம் அடிக்கும்...”
மாணிக்கம் காட்டிய அறையை பார்த்துக் கொண்டே, “ஓகே... அந்த பொண்ணு ரோஹினி உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று வினவினான் வினோதன்.
“எப்படி சார் மறக்க முடியும்? மூணு வருஷமா அப்பப்போ கனவுல கூட அந்த பொண்ணோட முகம் வந்து போகும்... சரியான வாயாடி பொண்ணு சார். எப்போ பார் பேசிட்டே இருக்கும்...”
“நீங்க அவக்கிட்ட பேசி இருக்கீங்களா?”
“பேசினீங்களாவா? நான் பேசனும்னு இல்லை அவளே வந்து பேசுவா... எனக்கு சின்னதா தானே சார் தொப்பை இருக்கு? மூணு வருஷத்துக்கு முன்னாடி இது கூட இல்லை, ஆனாலும் என்னை பார்க்கும் போதெல்லாம் எத்தனாவது மாசம்னு கேட்டு கிண்டல் செய்யும் அந்த பொண்ணு... இன்னும் கூட தற்கொலை செய்துகிட்டான்னு என்னால நம்ப முடியலை...”
“அவ இறந்த நாள்ல முதல்ல பாடியை பார்த்தது நீங்க தானே?”
“ஆமாம் சார். ரோஹினியை காணும்னு சின்னம்மா சொல்லவும் எல்லா இடத்திலேயும் தேடினோம். அந்த கிணத்து பக்கம் நெறைய மரங்க இருக்கும் சார்... நல்ல நிழலோட சிலுசிலுன்னு காத்தும் அடிக்கும். ஒருவேளை அந்த பொண்ணு அங்கே படிக்க போய்