"ஆமாண்டி என் ஸ்வர்ணமே?" என்று கண்ணை துடைத்துக் கொண்டு அவளை அணைத்துக் கொண்டான் மாதவன்.
அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது, அந்த மெல்லிய வெளிச்சத்திலும் அவனுக்கு தெரிந்தது. "தேங்க்ஸ் மானசா. இப்பவாவது என்னோட நல்லா பேசினியே. என் வாழ்க்கை இப்படியே போயிடுமோன்னு நினைச்சிண்டிருந்தேன், நல்ல வேளை நீ உன் மனச மாத்திண்டுட்ட." என்றான் மாதவன் ஒரு நிம்மதியோடு .
"நம்ம குட்டிகளுக்காக நாம மாறித்தான் ஆகணும் நாயர், அவங்க எதிர்காலத்துக்கு அதான நல்லது"என்று கூறிவிட்டு தொடர்ந்தாள்.
"எனக்கு என்ன சொல்றதுன்னு அரியலை , எனக்கு பெரிய லவ் ஒன்னும் இல்ல,உங்கள முதல் தடவ பார்க்கறச்சே கொஞ்சம் பயம் இருந்தது ஆனா பிடிச்சிருந்தது.. அது ஒரு வயசு கோளாறா கூட இருந்திருக்கலாம், இல்ல நீங்க பார்த்த பார்வையாலும் இருக்கலாம், ஆனா நீங்க வீட்டுக்கு வந்து அச்சன்கிட்ட அப்படி நடந்தப்போ எனக்கு உங்கள பிடிக்கல. எங்க அச்சன், அம்மை ரெண்டுபேரும் என்னை தவறா நினைச்சுண்டுட்டா, அவா கிட்ட எனக்கு கெட்ட பேர் வாங்கி கொடுத்துட்டீங்கன்னு உங்க மேல பெரிய கோபம் இருந்தது...." அவள் கொஞ்சம் இடைவெளி விட்டு தன் கண்ணில் வழிந்த கண்ணீரை மறைத்துக் கொள்ள முனைந்தாள். அவனோ அவள் பேசும் பொழுது அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் கண்ணீரையா பார்க்காமல் இருப்பான். அவளை சமாதனப் படுத்தும் வகையில் அவன் அணைப்பை இறுக்கினான்.
“நீ மேலே சொல்லு. “
“ஞான் உங்களை மொத முறை பாக்கறச்சே, ரொம்ப பிடிச்சு்து. அது காதல் இல்லை. உங்க மேல பிரியம் உண்டு. பட்சே, நிங்கள் எங்க அச்சனிடத்தில் ….பிறகு என்னை போர்ஸ் செய்து கல்யாணம் செய்து... என்னை எங்க வீட்டு ஆளுங்ககிட்டேருந்து பிரிச்சிட்டீங்க அதான் எனக்கு வளற (ரொம்ப)கோபம்.”