வருவாங்க...” என்றான் மனோஜ்.
மஞ்சு போனை எடுத்து தன் வீட்டு நம்பரை டையல் செய்தாள்.
சாதனா, பத்மா, பிரேம்குமார், என அனைவரிடமும் பொதுவாக பேசி விட்டு அம்மாவிடம் கேட்க விரும்பியதைக் கேட்டாள் மஞ்சு.
“நான் எப்படி வர முடியும் மஞ்சு?” என்றாள் பத்மா நம்ப முடியாமல்!
“ஏன்ம்மா வர முடியாது???”
“உங்கப்பாக்கு தண்ணியை ஸ்டவ்ல வைக்க கூட தெரியாது...”
கணவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே,
“அப்பாவையும் வரச் சொல்லுங்க... இரண்டுப் பேருமா வாங்க...” என்றாள்.
மனோஜும் ஆமோதிப்பதாக தலையை ஆட்டினான்...
“நாங்க இரண்டுப் பேரும் அங்கே வந்துட்டா சாதனாவை யார் பார்த்துப்பா??? அவளை தனியா விட்டுட்டு வர முடியுமா?? நான் சொல்றதைக் கேளு, நீ கிளம்பி வந்திடு... குழந்தை பிறந்து கொஞ்சம் மாசம் கழிச்சு திரும்ப போ...”
“இவங்க மட்டும் இவங்க வீட்டுக்காரரை விட்டுட்டு வர மாட்டாங்க, நான் மட்டும் என் மனோஜை விட்டுட்டு வரணுமாம்...!” என மெதுவாக முணுமுணுத்த மஞ்சு, சத்தமாக,
“சாதனாவை மனோஜ் வீட்டுல தங்க சொன்னா என்னம்மா?” என்றாள்.
“அதெல்லாம் நல்லா இருக்காது மஞ்சு. ஒரு நாள் இரண்டு நாள்ன்னு சொன்னா பரவாயில்லை. இது மாசக்கணக்கில ஆகும்... சாதனாக்கு கல்யாணம் ஆகி இருந்தா பிரச்சனை இல்லை...”