(Reading time: 9 - 17 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

  

மனதில் இருந்த கவலைகளை பற்றி சொல்லாது மனோஜின் மார்பில் முகம் சாய்த்துக் கொண்டாள்...

  

தொடர்ந்த நாட்களில் மனோஜ் சொன்னதை அப்படியே செய்தான்...

  

மஞ்சுவை கண்மணியாக பார்த்துக் கொண்டான்... மார்னிங் சிக்னஸ் காரணமாக மஞ்சு ஓய்வெடுக்க, மனோஜே சமையல் செய்தான்... அலுவலகத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் செய்து அவளிடம் பேசினான், நலம் விசாரித்தான்... தினம் தினம் மாலையில் அவளுடன் வாக்கிங் வந்தான், அவளுக்கு பிடித்ததை பேசினான்... விரும்பியதை எல்லாம் செய்தான்...

  

மொத்தத்தில் மஞ்சுவிற்கு எந்த விதத்திலும் குறை இல்லாமல் பார்த்துக் கொண்டான்!

  

மஞ்சு உண்மையிலேயே உச்சிக் குளிர்ந்துப் போயிருந்தாள்!

  

கணவனின் அதிகப் படியான கவனிப்பு அவனின் அன்பை பறைசாற்ற அவளின் மனம் மிகவும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது!

  

பழைய சோர்வு, வருத்தம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துப் போக மகிழ்ச்சியுடனே நாட்களை கடத்தினாள்.

  

ஆனால், மனோஜிற்கு அதிக வேலை வைக்கிறோமா என்ற சின்னக் கவலை மட்டுமே மஞ்சுவின் மனசுக்குள் இருந்துக் கொண்டே இருந்தது...

  

ஒரு நாள் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக வீட்டிற்கு வந்த மனோஜ், அதற்கான காரணங்களை சொல்லி சாரி சாரி என்று சாரி மழை பொழியவும், மஞ்சு மனதில் இருந்ததை வெளிப்படையாக கேட்டே விட்டாள்...

  

“நீங்க இவ்வளவு சாரி சொல்லனும்னு கிடையாது மனோஜ்... வேலை பத்தி எனக்கு தெரியாதா

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.