(Reading time: 9 - 17 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்ந்து சாதனா திருமணம் பற்றி பேசிவிட்டு அழைப்பை முடித்தாள் மஞ்சு.

  

“எல்லோர் வீட்டுலேயும் அமெரிக்காக்கு வாங்கன்னு சொன்னா உடனே கிளம்பி வராங்க... நமக்குன்னு அதெப்படி தான் புது புது பிரச்சனை வரும்னே தெரியலை...” என்றான் மனோஜ் எரிச்சலுடன்...!

  

அவனை ஒருப் பார்வை பார்த்த மஞ்சு,

  

“நான் பேசாம கிளம்பி போகட்டுமா மனோஜ்??” என்றுக் கேட்டாள்.

  

அவளின் உதட்டில் விரல் வைத்து பேசாதே என்று சைகையால் சொன்ன மனோஜ்,

  

“இல்லை pbs... உன்னையும் என் குழந்தையையும் நான் தான் பார்த்துப்பேன்...” என்றான் பிடிவாதத்துடன்!

  

மஞ்சுவிற்கு அவன் அதை சொன்ன விதம் பிடித்திருந்தது... ஆனாலும், அவனுக்கு பாரமாக இருந்து விடக் கூடாது என்றும் நினைத்தாள்...

  

“அதுக்கில்லை மனோஜ், நீங்க வேலையிலேயும் கான்சன்ட்ரேட் செய்யனும்... அதே டைம்ல என்னையும் கவனிச்சுக்கனும்னா கஷ்டமா இருக்காதா???”

  

“வீட்டுல சண்டைப் போட்டு கல்யாணம் செய்ற எத்தனைப் பேர் அதெல்லாம் செய்றாங்க!!! நான் உன்னை லவ் செய்து கல்யாணம் செய்துக்கிட்டேன்... கல்யாணம் தான் கோல்மால் செய்து அரேன்ஜ்ட் மேரேஜா மாறிப் போயிடுச்சு... இப்போவாவது லவ் மேரேஜ் போல இருக்கட்டும்... நான் உன்னை பார்த்துப்பேன் மஞ்சு... உன் அம்மாவாகவும் இருந்து நான் பார்த்துக்குறேன்...”

  

மஞ்சு மேலே வாக்குவாதம் செய்துக் கொண்டிருக்கவில்லை... அவளுக்கு தனிமை அலுப்பைக் கொடுத்தது, உடல் அயர்வு சோர்வைக் கொடுத்தது... ஆனாலும் கணவனின் அன்பு அதை எல்லாம் மறக்க செய்தது...

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.