தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
20. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
உதட்டில் சின்ன புன்னகை மின்ன,
"தேங்க்ஸ் சஞ்சீவ்... ஆனால்... நான் சீக்கிரம் கிளம்பினது உங்களுக்கு எப்படி தெரியும்?" என வினவினாள் இந்து.
"அது.... நீங்க என் மெசேஜுக்கு ரிப்ளை அனுப்பலையா... என்னன்னு தெரியலை... உங்க செல்லுக்கு தானே நான் ஃபோன் பண்ண மாட்டேன்னு சொன்னேன்... உங்க லேன்ட் லைன் நம்பருக்கு போன் போட்டேன்... உங்க வீட்டு கனகா தான் சொன்னாங்க, நீங்க இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டீங்கன்னு.... சரி, உங்களை நேரா பார்த்து ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லலாம்ன்னு தோணிச்சு..." என்று விளக்கமாகவே பதில் சொன்னான் சஞ்சீவ்.
இந்துவிற்கு நிஜமாகவே மகிழ்ச்சியாக இருந்தது... அகத்தை முகம் காட்டியப் போதும், என்ன பதில் சொல்வது என்று அவள் சற்று தடுமாறினாள். அவளின் முக மலர்ச்சியிலே புரிந்துக் கொண்டவனாய்,
"சரி, இதுக்கு மேல உங்க டைமை நான் வேஸ்ட் பண்ண விரும்பலை... யூ கேரி ஆன்... நானும் வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு ஹாஸ்பிட்டல் போகனும்...." என்றான் சஞ்சீவ்.
"ரொம்ப தேங்க்ஸ் சஞ்சீவ்..." என மீண்டும் சொன்னாள் இந்து!
அவளின் முகத்தை உற்று நோக்கி, அவளின் முகத்தை நிறம் மாற செய்த சஞ்சீவ்,
"அப்புறம்... நாளைக்கு ஒரு நாலு மணிக்கு நான் உங்களை உங்க வீட்டில இருந்து பிக் அப் பண்ணவா???" என்றான் பட்டுப் போன்ற மிருதுவான குரலில்.
சரி என தலை அசைத்த இந்து,
"ஆனால்..." என்று தொடங்கி விட்டு, கேட்க வந்ததை முழுவதுமாக கேட்க முடியாது தயங்கினாள்...