Page 3 of 31
”ஆமாம்”
”அதான் உன் பிரம்மசரியம் போயிடுச்சே அப்புறம் எதுக்காக வீம்பு பிடிக்கற”
”உன்கூட வாழ எனக்கு பிடிக்கலை போதுமா”
”காரணம்”
”உன்மேல ஆசைப்பட்டு நான் கல்யாணம் செய்துக்கலை, அதோட விருப்பமில்லாத பெண்ணை தொடற கெட்டப்புத்தி எனக்கு கிடையாது“
”ஆனா உரிமையிருக்கறவளை தொடலாமே”
”வேணாம்”
”நான் வேணாமா உனக்கு”
”ஆமாம் வேணாம்“
”நல்லா யோசி கொம்பா நல்ல வாய்ப்பு இது, எந்தளவுக்கு வெறுப்பு இருந்தாலும் இந்த விசயத்தில மட்டும் வெறுப்பு காட்டினா நஷ்டம் உனக்குதான் மறுபடியும் இந்த வாய்ப்பு வராது”
”வந்தவரைக்கும் போதும் ஆளை விடு“ என சொல்லியவன் எழுந்து அக்கம் பக்கம் பார்த்து ஒரு தலையணையுடன் தரையில் படுத்துவிட்டான். தரையில் படுத்திருந்தவனைக் கண்டவள்
”அவ்ளோதானா கொம்பா”“