அவரின் செய்கையைக் கண்டு அந்நேரம் சந்தேகம் வந்தாலும் கீர்த்தனாவின் நினைவால் அவன் வீட்டுக்குள் சென்றான். பின்னாடியே வந்த தாஸ், தாத்தா மற்றும் தேவாவிற்கு நடுவில் நடந்த உரையாடல்களையும் தாத்தாவின் செயலையும் கண்டு நேராக தாத்தாவிடம் வந்து நின்று
”இது தப்பு” என்பது போல் சைகை செய்ய அவரோ
”பாவம்டா தாமரை நான் இதை சாப்பிடலைன்னு தெரிஞ்சா கோச்சிக்கும்” என சொல்ல தாஸ் உடனே
”டாக்டர்” என்பது போல் சைகை செய்ய
”அவன் கிடக்கறான் கிழவன், உடம்பெல்லாம் வியாதி சுகர், பிபின்னு இருக்கு அவனால இதை சாப்பிட முடியுமா நான் பாரு எப்படி இருக்கேன்னு அதான் எனக்கு கொடுத்திருக்கா” என சொல்ல தாஸ் உடனே
”வேணாம்” என்பது போல் சைகை செய்ய
”டேய் நீ போடா உனக்கு எல்லாம் தெரியும் பாரு போ போ” என விரட்டிவிட்டு அவர் வேகமாக சாப்பிட்டு திருப்தியாக எழுந்து நிற்க அந்நேரம் அவரது மனைவி வெளிய வந்தார்
”வாங்க சாப்பிடுவீங்க”
“இப்பதான் சாப்பிட்டேன்”
“சாப்பிட்டீங்களா என்ன சொல்றீங்க” என சந்தேகத்துடன் கேட்க
”தேவா கோயிலுக்கு போயிருந்தான் வர்றப்ப பிரசாதம் கொண்டு வந்திருந்தான், அதுவே நிறைய இருந்திச்சி. அதை சாப்பிட்டததும் மனசும் வயிறும் நிரைஞ்சிடுச்சி. நீ போய்