இவனுக்கு புரியப் போவதில்லை, சைகை செய்தாலும் லாபமில்லை என்று உணர்ந்தவன் அவசரமாக தேடிப்பிடித்து ஒரு பேப்பர் பேனாவுடன் மெத்தையில் அமர்ந்தவன் வேகமாக தனக்கு தெரிந்த சிறிது நேரத்தில் தான் கண்ட கேட்ட விசய்ஙகளை வேகமாக எழுதிக் கொண்டிருந்தான்.
அவன் ஏதோ எழுதுவதைக் கண்டு கவனித்த தேவாவும் என்னவோ என அந்நேரம் அமைதியாக இருந்துவிட்டு கீர்த்தனாவை நினைத்துக் கொண்டே படுக்கையில் படுத்தவன் கவலையை மறந்து புன்னகை அரும்ப உறங்கலானான்.
ஒரு பக்கம் முழுக்க லெட்டர் எழுதி முடித்த தாஸோ அதை தர தேவாவை தேட அவன் சந்தோஷமாக உறங்குவதைக் கண்டு பெருமூச்சு விட்டவன் அந்த லெட்டரை தன் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு தனக்கென இருந்த அறைக்குச் சென்று படுத்து விடிந்ததும் லெட்டரை தேவாவிடம் தந்துவிட வேண்டும், அதை படித்தஉடன் தேவா கவலைப்படுவானே என தாஸ் கவலையுடன் நேரம் கழித்து உறங்கலானான்.
தாஸின் லெட்டரால் ஆபத்து வருமா? தேவா லெட்டரில் இருக்கும் உண்மையை நம்புவானா?? நம்பி கீர்த்தனாவின் மனதை அறிய முயல்வானா இல்லை நண்பன் விக்ரமுக்காக அவளை விட்டுக் கொடுப்பானா???
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...