சாப்பிடு எனக்கு இதுவே போதும்” என சொல்ல பாட்டியும் அமைதியாக உள்ளே சென்றுவிட தாஸ் தாத்தவின் முன் நின்று
”என்ன நடக்குது இங்க” என சைகை செய்ய
”ஆயிரம்தான் இருந்தாலும் தாமரை யாரு?” என கேட்க தாஸ் உடனே
”யாரு?” என்பது போல் கை அசைக்க
”சொல்றேன் ஆனா யார்கிட்டயும் நீ சொல்லக் கூடாது சத்தியம் பண்ணு” என உள்ளங்கையை நீட்ட அவனோ சரியென சத்தியம் செய்ய வர உடனே அவர்
”இப்ப நீ சத்தியம் பண்ணிட்டு அப்புறம் நீ சத்தியத்தை மீறி உண்மையை சொன்ன தேவாவுக்கு கெடுதல் நடக்கும் பார்த்துக்க” என மிரட்ட தாஸ் சற்று மிரட்சியுடன் சரியென சத்தியம் செய்துவிட்டு என்ன என்பது போல் சைகை செய்ய
அவரோ அவனது காதோரம் ஒரு பயங்கர உண்மையை சொன்னார். அது
”அந்த தாமரை கல்யாணத்துக்கு முன்னாடி சின்ன வயசில என் காதலி” என சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே அவர் வீட்டுக்குள் சென்றுவிட தாஸ் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றான். இன்று ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகளா? சில நொடிகள்தான் அவனுக்கு உலகமே சுற்றுவது போல உணர்வு வர உடனே தேவாவை காண ஓடினான்.
அங்கு தேவாவோ கீர்த்தனாவின் நினைப்பில்
வளையோசை கலகல கலவெனக் கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலுவென சிறு விரல் பட பட துடிக்குது