”நமக்குள்ள நடக்க வேண்டியது நல்லபடியா நடந்துடுச்சி, என்ன அதை பார்க்க ரசிக்க அனுபவிக்க உன்னால முடியலை, அதுக்குள்ள நீ மயங்கிட்ட இல்லைன்னு வையேன், என்னோட செயலை பார்த்து நீ மதிமயங்கிப் போயிருப்ப” என சொல்ல அவளோ அதிர்வது போல் நடித்துவிட்டு மென்மையாகச் சிரித்தாள், அந்தச் சிரிப்பில் தன்னை தொலைத்தான் தருண்
”என் மேல கோபம் இல்லையா உனக்கு”
”இதுக்கு மேல உங்களை கோச்சிக்க முடியுமா என்னால”
”இது போதும் இதுக்குதான் நான் அப்பவே முதலிரவு கொண்டாடலாம்னு சொன்னேன், நீதான் கேட்கலை இப்ப பாரு உனக்கு என் மேல இருந்த கோபம், வெறுப்பு, சந்தேகம் எல்லாம் போயிடுச்சி, எங்க நான் பவானியை நினைச்சிக்கிட்டு உன்னை மறந்துடுவேன்னு நீ தினமும் பயந்தல்ல, இனி அந்த பயமே உனக்கு வேணாம், நான் சாகறவரைக்கும் உன்னை மட்டுமே நினைச்சிக்கிட்டு இருப்பேன் இது சத்தியம்” என அவன் சொல்ல அவளுக்கு சிரிப்பாக இருந்தது மென்மையாக சிரித்தவள்
”ஆபிசுக்கு வேற போகனும் ரொம்ப டயர்டா இருக்கு” என சொல்ல அவனோ
”ரெஸ்ட் எடுத்துக்க நேத்து நான் செய்த வேலைக்கு உன் உடம்பு அடிச்சி போட்ட மாதிரியிருக்கும் இந்த நிலைமையில உன்னால எந்த வேலையும் செய்ய முடியாது பேசாம லீவு சொல்லிடு”
”ஓகே ஆனா சமைக்கனுமே” என இழுக்க
“ரிலாக்ஸ் இன்னிக்கு ஒரு நாள் முழுக்க நானே சாப்பாட்டை வரவழைக்கிறேன், நீ எதுக்கும் அலட்டிக்காத ரெஸ்ட் எடு” என சொல்ல அவளும் படுக்கையில் படுத்துக் கொள்ள அவளுக்கு பெட்ஷீட் போர்த்திவிட்டு ஒரு சின்ன சிரிப்பை பூத்துவிட்டு சென்றான். அவன் சென்றதும் ஹரிணிக்கு வேடிக்கையாக இருந்தது