(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”என் டெபிட் கார்டு எங்க”

   

”எதுக்கு கேட்கற“

   

”அதைக் கொடுங்க அதான் எப்படியோ தேடி கண்டுபிடிச்சிட்டிங்களே அப்புறம் என்ன கொடுங்க“

   

”முடியாது“

   

”ஏன் முடியாது“

   

”வீட்டு செலவுகளை பார்க்கனும்ல அதெல்லாம் தரமுடியாது“

   

“அதை வைச்சி புது போன் வாங்கி ஏதாவது வீடியோ எடுத்தீங்கன்னு தெரிஞ்சது நான் பொல்லாதவளாயிடுவேன் ஜாக்கிரதை” என மிரட்டிவிட்டு அவள் சென்றுவிட தருண் கதிகலங்கிப் போனான்

   

ஹரிணியின் இந்த செயல், பேச்சு அவனை மிரள வைத்தது. தன் அறைக்குச் சென்றவன் ஹரிணியை நினைத்து பலமாக யோசிக்கலான்.

   

”ஹரிணியோட நடவடிக்கையில நிறைய மாற்றங்கள் இருக்கு ஏதோ தப்பாயிருக்கு அதை எப்படி தெரிஞ்சிக்கறதுன்னு தெரியலையே, இவளோட நாம வாழ்ந்தா நம்ம வாழ்க்கை சொர்க்கமாயிருக்கும்னு நினைச்சா தினம் தினம் நமக்கு நரகத்தை காட்டறாளே, இவளை குறைச்சி எடைபோட்டுட்டோம், நம்ம வழிக்கு இவள் வருவாள்ன்னு பார்த்தா கடைசியா இவள் நம்மளை அவள் வழிக்கு கொண்டு போயிடுவா போல இருக்கே, இவளை எப்படி அடக்கறது வேற வழியில்லை, அவளை அடைஞ்சா மட்டும்தான் நம்ம வழிக்கு வருவா ஆனா அதுக்கு அவள் சம்மதிக்கனுமே ஆமா அவள் சம்மதத்துக்காக நாம காத்திருந்தா காத்துக்கிட்டுதான் இருக்கனும், இவளை இப்படியே விடக்கூடாது விட்டா என் தலைமேல ஏறி நின்னு ஆடுவா, எனக்கு வேலையில்லை வீட்ல சும்மாயிருக்கேன்ல, அதனால என்னை இளப்பமா பார்க்கறா அதுக்காக வேலைக்கு போகனுமா வேணாம் இவளை நமக்கு பணிய வைச்சிடலாம் அவளுக்கு மயக்க மருந்து தந்து அவள் தூங்கின பின்னாடி அவளை அனுபவிச்சிட்டா எப்படி ஆனா இந்த 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.