”எது என்னம்மா இப்படி சொல்ற“
”வேற என்ன செய்யச் சொல்ற, செத்தவளோட போட்டோவை வைச்சி கும்பிட சொல்றியா“
”அய்யோ அம்மா பவானியோட போட்டோ இல்லாம நான் ஹரிணிக்கிட்ட போனா அவள் என்னை தப்பா நினைப்பாள்ம்மா”
”என்னடா நீ இதுக்கு போய் அலட்டிக்கற, போட்டோ இல்லாட்டி என்ன விடு“
”அய்யோ உனக்கு என்ன சொன்னாலும் புரியாது நான் செத்தேன்” என புலம்பிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.
ஹரிணியும் நேரத்தை பார்த்தாள்
”ஒரு புடவை வாங்கி வரவா இவ்ளோ நேரம் இருக்காதே வேற ஏதோ தப்பாயிருக்கு” என நினைத்துக் கொண்டிருக்க தருண் வந்தான்.
”வாங்க தருண் என்ன இவ்ளோ நேரம்”
“அதுவா அது வந்து வீட்டுக்கு போனேனா, அம்மா என்னை விடவேயில்லை அதான்”
”சமையல் எல்லாம் முடிஞ்சிடுச்சி”
”நானும் புடவை வாங்கிட்டு வந்துட்டேன்”
”சரி கும்பிடலாமா“
”ஓ எஸ்”
”பவானியோட போட்டோ எங்க”