(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu


   
அரை மணி நேரமானதும் அவுட்டர் வந்துவிட பயந்தாள் கீர்த்தனா
   
”எங்க போறோம்”
   
“ம் பண்ணை வீட்டுக்கு”
   
“பண்ணை வீடா” என யோசித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா, அதற்குள் பண்ணை வீடு வரவும் இருவரும் இறங்கி உள்ளே சென்றார்கள். அங்கு அவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றவன் அங்கிருந்த கட்டிலில் அவளை அமர வைத்தான். 
   
”என்ன செய்றீங்க நான் சீக்கிரமா வீட்டுக்குப் போகனும்”
   
“போலாம் என்ன அவசரம்” என அவள் பக்கம் அமர்ந்தவன் அவளை இழுத்து அணைக்க
   
”இது தப்பு, அண்ணா திட்டுவாரு”
   
“உன் அண்ணன் இங்க இல்லை” என சந்தோசமாக தேவா சொல்ல அதற்கு கீர்த்தி
   
“ஆனாலும் தப்பு கல்யாணத்துக்கு முன்னாடி”
   
“சும்மாதான் பெரிசா நான் எதையும் செய்யலை”
   
“ம்ஹூம் நான் போறேன்” என சொன்னாளே தவிர அதற்கான எதையும் அவள் செய்யவில்லை. அவனை விட  இவளே அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு இருந்தாள். அவளை மெதுவாக படுக்கையில் படுக்க வைத்தவன் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே
   
”நீ அழகாயிருக்க”
   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.