”பாட்டி ஏன் அடிச்சீங்க நான் என்ன தப்பு செஞ்சேன்“
“என்ன தப்பா ஏன்டா வீட்ல இவளை வைச்சிட்டு புதுசா ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து நிக்கற என்னடா நடக்குது இங்க” என கத்த தேவா பாட்டியிடம்
”பாட்டி நீங்கதான் முதல்ல இருந்து தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க, நான் விரும்பற பொண்ணு இவள்தான் இவள் பேரு கீர்த்தனா”
“அப்ப இவளை எதுக்காக கூட்டிட்டு வந்த” என சரண்யாவை பார்த்து கேட்க அவளை புதிதாக பார்த்த கீர்த்தனாவோ தேவாவிடம்
”யார் இந்த பொண்ணு” என கேட்க அவனோ அவளைப் பார்த்தான் விட்டால் அழுதுவிடுவாள் போல இருக்கவே சிரித்தவன்
”பைத்தியம் நீயும் பாட்டியை போல தப்பா நினைக்காத அமைதியா இரு” என சொல்லிவிட்டு பாட்டியிடம்
”பாட்டி இவள் அப்பாவோட சென்னை ப்ரெண்டோட பொண்ணு, அப்பாதான் இவளை கூட்டிட்டு வந்து இங்க தங்க வைக்க சொன்னாரு, நான் கொண்டாந்து விட்டுட்டேன் வேணா கேட்டுப்பாருங்க” என தன் தந்தையை பார்க்க அவரும்
”ஆமாம் இதுல என்னம்மா பிரச்சனை” என கோசலையை கேட்க
”ஆனா நான் இந்த பொண்ணை தேவாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சேனே”
“எதுக்காக அப்படி நினைச்ச என் பேரன் அப்படி சொன்னானா உன்கிட்ட” என தாத்தா கேட்க அதற்கு கோசலை
”இல்லை அன்னிக்கு சரண்யாவை கூட்டிட்டு வந்து விடவும், நான் ரெண்டு பேரும்
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 7 of 36