அப்படி நீ கல்யாணம் பண்ணாலும் நீ எதிர்ப்பாரக்கற காதல் என்னிக்குமே உனக்கு கிடைக்காது. அப்புறம் நீ கல்யாணம் பண்ணதே வேஸ்ட்டாயிடும், இப்ப நீ இங்க நின்னு கத்தாம கிளம்பு போ” என விரட்ட அவனும் வேறுவழியில்லாமல் கேட் வரை சென்றவன்
”கண்டிப்பா நான் பெரியாளாகி வருவேன் கீர்த்தனா, உனக்கு பிடிக்கலைன்னாலும் உன்னை தூக்கிட்டு போய் நான் தாலி கட்டி தேவா முன்னாடியே நான் குடும்பம் நடத்தி காட்டுவேன்.” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட கீர்த்தனாவிற்கு பயமே வந்து அழவே ஆரம்பித்தாள்.
”நீ ஏன் அழற? அவன் சொன்னா ஆயிடுச்சா, இதப்பாரு என்னை நம்பு அவன் எப்படி உன்னை தூக்கறான்னு நானும் பார்க்கறேன், என் வாழ்க்கையை போல உன் வாழ்க்கையும் அமைய நான் விடவே மாட்டேன், உன் காதல் உனக்கு நிச்சயம் கிடைக்கும் வா வா” என அவளை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயல அங்கு சுந்தரம் பேயறைந்ததைப் போல இருப்பதைக் கண்டு
”அன்னிக்கு நான் தோத்துட்டேன், இன்னிக்கு நான் ஜெயிச்சிட்டேன், இவளோட காதல் கண்டிப்பா ஜெயிக்கும்” என தாமரை சொல்லிவிட்டு அவளை வீட்டுக்குள் அழைத்துச் செல்ல சுந்தரத்தின் முகம் கருத்துவிட்டது. நடப்பது அப்படியே தன் வாழ்வில் நடப்பது போல இருப்பதைக் கண்டு திரும்பி பக்கத்து வீடு பார்க்க அங்கு வைத்தியநாதன் தன் மீசையை முறுக்கிவிட்டு ஏளனமாக ஒரு சிரிப்புடன் அங்கிருந்தபடியே
”பாரு சுந்தரம் அன்னிக்கு நீ சூழ்ச்சி செஞ்சி எங்களை பிரிச்ச ஆனா, இன்னிக்கு தாமரை என்ன சொன்னாள்னு பார்த்தியா, நான் இருக்கறவரைக்கும் தேவாவோட காதல் தோக்காது, நான் ஏமாந்த மாதிரி அவன் ஏமாறமாட்டான். நான் செத்தாலும் தேவாவையும் கீர்த்தனாவையும் நான் சேர்த்து வைச்சிடுவேன். என் காதலை நீ பறிச்சல்ல, இன்னிக்கு வரைக்கும் உனக்கான காதல் உனக்கு கிடைச்சதா இல்லையே”
“இல்லை என் காதல் எனக்கு இப்பவும் இருக்கு, தாமரை என்னை விரும்பறா” என சுந்தரம் சொல்ல அவரைக் கண்டு எக்கத்தாளமாக சிரித்துவிட்டு ஒரு கேவலமான பார்வையை வீச அதைக் கண்டு கூனிக்குருகி நின்றார் டாக்டர் சுந்தரம்
தாமரையின் வாழ்க்கையில் நடந்த அதே காதல் கதை இப்போது கீர்த்தனாவின் வாழ்க்கையில் நடக்கிறது. தாமரை அன்று தோற்றுவிட்டாள், இம்முறை கீர்த்தனா ஜெயிப்பாளா? தன் காதலனை கைப்பிடிப்பாளா?? இல்லை தாமரை போலவே கீர்த்தனாவும் தன் காதலில் தோற்றுவிடுவாளா???
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...