மோசமாயிடும் பாட்டி என்னை காப்பாத்துங்க” என அச்சத்துடன் கீர்த்தி பேச
”நான் இருக்கேன் நீ ஏன் பயப்படற நான் பார்த்துக்கறேன், விக்ரமுக்கு நீயும் தேவாவும் லவ் பண்ற விசயம் தெரியுமா தெரியாதா”
“தெரியும் தெரிஞ்சிதான் அவன் வரான்”
“வரட்டும் என் கதையை போலவே உன் கதை ஓடுதா, இந்த முறை நான் விடமாட்டேன், நான் ஏமாந்துட்டேன் ஆனா நீ ஏமாறக்கூடாது நிச்சயம் இந்த முறை நீ விரும்பின தேவாவோடவே உனக்கு கல்யாணம் செஞ்சி வைப்பேன். இது சத்தியம்” என அவள் தலை மீது கைவைத்து சத்தியம் செய்ய அவள் நிம்மதியானாள் சுந்தரமோ தன் மனைவியின் பேச்சைக் கேட்டு நிராசை அடைந்தார் வாசலில் விக்ரம் வந்து
”சார் சார்” என அழைக்கும் சத்தம் கேட்டு சுந்தரம் என்ன ஏது என பார்ப்பதற்குள்
”பாட்டி விக்ரம்தான் இப்ப என்ன செய்றது”
“நீ வாம்மா ஏன் பயப்படற வா வா” என அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார் அங்கு விக்ரம் இருக்கவே
”என்னப்பா என்ன விசயம்”
“நான் கீர்த்தனாகிட்ட பேசனும்”
“பேசு” என சொல்ல அவன் அவளிடம்
”கீர்த்தி 5 வருஷமா நான் உன்னை பார்க்கறேன், நான் சின்சியரா உன்னை லவ் பண்றேன், என் தங்கச்சிக்காகத்தான் என் காதலை நான் உன்கிட்ட சொல்லாம இருந்தேன். உனக்கே தெரியும் நான் ஒண்ணுமில்லாதவன்னு, அப்பா, அம்மா கூட இல்லை சாதாரண ஒர்க்ஷாப்ல வேலை செய்றேன் எப்படியாவது என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 33 of 36