(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

கூட்டிட்டு வந்திருக்கலாமே” என சரண்யா சொல்ல தேவாவுக்கு கோபமே வந்தது
   
”உன் நாடகத்தை நிப்பாட்டு கிளம்பு” என சொல்லிவிட்டு
   
”தாஸ் அவளோட லக்கேஜ் எல்லாம் எடுத்து அப்பா வண்டியில வை, நான் அவளை கொண்டு போய் விடமாட்டேன், அப்பாவோட டிரைவர் கிட்ட சொல்லிடு, இவள் எங்க போக ஆசைப்படறாளோ அங்கயோ போகட்டும்“ என சொல்ல இப்போது சரண்யாவுக்கு கோபம் வந்தது
   
”என்னை வெறுக்கறது நியாயமில்லை”
   
“என்னை நீ விரும்பறதும் நியாயமில்லை”
   
“ஏன் இல்லை எனக்கு உங்களை பிடிச்சிருக்கு”
   
“உனக்கு முன்னாடி எனக்கு இவளை பிடிச்சிருக்கு, உனக்கு முன்னாடி நான் இவளைப் பார்த்து காதலிச்சிட்டேன் போதுமா”
   
“இவள் இல்லைன்னா அப்ப என்னை ஏத்துக்குவீங்களா” என அவள் ஆக்ரோஷமாகக் கேட்டவிதம் யாருக்கும் பிடிக்கவில்லை. அவளது கோபமான முகத்தைக் கண்ட கீர்த்தனாவோ சட்டென பயந்து தேவாவின் கையை இறுக்கமாக பிடிக்க தேவாவிற்கு கோபமே வந்தது
   
”வேணாம் சரண்யா இதோட நிப்பாட்டு இவள் இல்லைன்னாலும் நீ எனக்கு வேணாம்”
   
“என்ன காரணம்?”
   
“நான் உன்னை விரும்பலை”
   
“இதுக்கப்புறம் விரும்பலாமே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.