”இது சரியா வராது நீ வாம்மா வா உன்னை நான் ப்ளைட் ஏத்தி விடறேன், நீ முதல்ல ஊர் போய் சேரு அப்புறம் தேவாவை மறந்துடு”
“அது என்னால முடியாது”
“நீ முதல்ல கிளம்பு வந்து 3 நாள் கூட ஆகலை அதுக்குள்ள எப்படி லவ் வரும்”
“எல்லாம் வரும்” என அவள் சண்டை பிடிக்க அவளிடம் 5 நிமிடம் பேசி புரிய வைத்தும் அவள் கேட்காமல் போகவே அதிர்ந்த கைலாசமோ ஒரு கட்டத்தில் சரண்யாவின் தந்தைக்குப் போன் செய்தார்
”ஹலோ பூபதி நான் கைலாசம் பேசறேன்பா” என சொல்ல அந்த பக்கம்
”எப்படியிருக்க? என் பொண்ணு எப்படியிருக்கா?”
“அவள் நல்லாயிருக்கா நான் இப்ப அவளை ப்ளைட் ஏத்தி அனுப்பறேன் நீ பார்த்துக்க”
“என்ன அவசரம்”
“தெரியலை அவள் வீட்டுக்கு போகனும்னு சொல்லிட்டா அதான்”
“சரி அனுப்பு நான் பார்த்துக்கறேன்”
“அப்புறம் ஒரு விசயம் சொல்லனும்”
“என்ன விசயம் ஹாஸ்டல் பிரச்சனை முடிஞ்சதா இல்லையா”
“அது நல்லபடியா முடிஞ்சது, இது உன் பொண்ணைப்பத்திதான்”
“என்னாச்சி அவள் ஏதாவது தப்பு செஞ்சிட்டாளா”
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 12 of 36