(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

விரும்பறதா நினைச்சேன், அவள் ஊரை விட்டு ஓடிவந்துட்டதா நினைச்சேன்”
   
“என்னத்த நினைச்ச ஒரு வார்த்தை அவன்ட்ட கேட்டிருக்கலாமே”
   
“எங்க அவன் வீட்லயே தங்க மாட்டேங்கறான், எப்பவும் பிசியா இருக்கான்”
   
“சரி அந்த சரண்யாகிட்டயே கேட்டிருக்கலாமே” என தாத்தா சொல்ல பாட்டி சரண்யாவைப் பார்த்தார்
   
”என்ன இது நீ ஏன் எதுவும் சொல்லலை”
   
“ஏன்னா நான் தேவாவை விரும்பறேன், அதனால சொல்லலை” என அவள் சொல்ல அனைவரும் அதிர்ந்தார்கள் அதில் கீர்த்தனா சட்டென தேவாவின் ஒரு கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள
   
”இரு ஏன் பயப்படற ஒண்ணுமில்லை, அவள் விரும்பினா ஆச்சா நான் விரும்பனும் சரியா அமைதி” என சொல்லியவன் பாட்டியிடம்
   
”பாட்டி நான் அப்பா சொன்ன வேலையை செஞ்சேன். அவ்ளோதான் நான் விரும்பறது கீர்த்தனாவைதான், நான் அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்” என சொல்ல தாஸ் உடனே புதிதாக வாங்கிய தாலியை எடுத்து வேற காட்ட பாட்டி தான் இப்படி முட்டாளானதை நினைத்து வருந்தி தேவாவிடம்
   
”தேவா, சரண்யா அவள் ஊருக்கு போறாளாம், எப்படி நீ கூட்டிட்டு வந்தியோ அப்படியே அவளை கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்துடு. இதோட இந்த பொண்ணுக்கும் நம்ம வீட்டுக்கும் இருந்த உறவு முடிஞ்சது” என சொல்ல சரண்யா பாட்டியிடம் வந்து அழுதாள்
   
”என்ன பாட்டி இது, வாய் நிறைய மருமகள் மருமகள்ன்னு சொல்லிட்டு இப்படி என்னை விரட்டலாமா எனக்கு தேவா வேணும், நான் அவரை விரும்பறேன். இந்த பொண்ணு திடீர்ன்னு வந்து நிக்கறா, ஒருவேளை என்னை விரட்ட தேவாவே இப்படி ஒரு பொண்ணை 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.