“ம்”
”பேசாம நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா”
“என்ன அவசரம்”
“உன் அழகால என்னை கொல்லுற”
”உங்க வீட்ல நீங்க எதுவும் சொல்லலையே”
“ம் சொல்றேன் இன்னிக்கே உன்னை கூட்டிட்டுப் போறேன்”
“நிஜமாவா”
“ஆமாம்”
“அப்புறம் ஏன் இங்க இருக்கோம்”
“ம் காதல் செய்யத்தான்” என அவளுக்கு ஆசைதீர முத்தம் தந்தான் தேவா
9 மணிக்கு ஹாஸ்டல் கட்டும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் தேவா கூடவே கீர்த்தனாவையும் அழைத்து வந்தான். அங்கு இருந்த தன் வேலையாட்களைக் கண்டான். அவர்களிடம்
”சம்பளம் வாங்கிக்குங்க 2 நாள் இந்த இடத்தில அஸ்திவாரம் அமைக்க சுத்தம் செஞ்சி 10 அடிக்கு பள்ளம் வெட்டினா போதும், அப்புறம் 1 வாரம் கழிச்சி செஞ்சிடலாம் வாங்க, வரிசையா லைன்ல நில்லுங்க” என சொல்ல அவர்களும் வரிசையாக நின்றார்கள். .தாஸ் ஒரு நோட்டை தேவாவிடம் தர அதை வாங்கிக் கொண்டு கணக்கு பார்த்தவன் முதலில்
”மேஸ்திரி அண்ணா வாங்க” என அழைக்க அவரும் முன்னாடி வர தேவா கீர்த்தனாவிடம்
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 4 of 36