“நான் இன்னும் 2 நாள் இங்க இருந்துட்டு வரேன்”
“இல்லை வேணாம் நீ வந்து சேரு வா” என சொல்லி போனை வைக்கவும் அவள் முகம் சூம்பி போனது. அமைதியாக கைலாசத்தைப் பார்க்க
”வாம்மா வா நானே உன்னை கூட்டிட்டுப் போறேன்”
“வேணாம் நானே போவேன்” என சொல்ல மறுத்தார்
”அதெல்லாம் முடியாது வா வா” என அவளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதும் அங்கிருந்தவர்களின் பார்வை கீர்த்தனாவின் மீது விழுந்தது. அவள் குழப்பமான முகத்துடன் சோகமாக இருப்பதைக் கண்ட பாட்டி அவளிடம் சென்றார்
”நீ கவலைப்படாத நான் பண்ண தப்பால வந்த வினை இது, அவள் போயிட்டா நீ வாம்மா வா” என அவளை பாசமாக அழைத்துக் கொள்ள தாத்தாவோ
”அவள் இங்க இருக்க வேணாம் ஏற்கனவே இங்க பெரிய பிரச்சனைங்க ஓடுது. தேவா நீ அவளை கூட்டிட்டு போய் அவள் வீட்ல விட்டுட்டு வா, கல்யாணம் ஆகட்டும் அப்புறம் கீர்த்தனா இங்க இருக்கட்டும்” என சொல்ல பாட்டியோ
”ஏன் இப்படி சொல்றீங்க?“
“கடைசி நேரத்தில கூட கல்யாணம் தடைபடும் என் அனுபவத்தில நான் சொல்றேன். வீணா ஆசையை அதிகமாக்கிக்கிட்டு யாரும் கஷ்டப்பட வேணாம்” என சொல்ல கீர்த்தனாவிற்கு தாத்தா சொன்னதைக் கேட்டு அவரின் காதல் கதை நினைவுக்கு வரவே அவள் தாத்தாவிடம்
”நீங்க சொன்னது சரிதான். நான் கிளம்பறேன் தாத்தா” என தனியாக அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு தாஸிடம் வந்து நின்றாள். அவளது முகத்தை வைத்தே புரிந்துக்
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 14 of 36