(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

அங்கு தேவா மற்றும் தாமரையை வார்டன் கேள்வி மேல் கேள்வி கேட்டு கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க

   

”ஒரு நிமிஷம் நான் சொல்றதை நம்புங்க” என தேவா சொல்ல அதற்கு வார்டனோ

   

”என்ன சார் இது, அப்பா அம்மா பேர் தெரியலை, போட்டோ இல்லை வெறும் பேரை வைச்சிக்கிட்டு இங்க வந்து நிக்கறீங்க, உங்களை நம்பி எப்படி நான் ஆளை காட்டறது, உங்களால அந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா என்னாகிறது” என சொல்ல பாட்டியே கைகூப்பி

   

”அம்மா இதப்பாரும்மா என்னை நம்பு, அவள் என் வீட்ல இருந்தவள்தான், நீ ஒரு முறை அவளை கூப்பிடும்மா அவள் எங்களை பார்த்து யாரோ தெரியலைன்னு சொல்லட்டும் நாங்க போயிடறோம்” என சொல்ல அவரும் வேறு வழியில்லாமல் ரெக்கார்டு புக் செக் செய்து ப்யூன் போல இருந்த பெண்மணியை வரவழைத்து ஏதோ சொல்ல அவரும் சென்று 10 நிமிடம் கழித்து வந்து

   

”அந்த ரூம்ல பவித்ரா கீர்த்தனா ரெண்டு பேர் இருந்தாங்க, லீவுன்னு ரெண்டு பேருமே ஊருக்கு போயிட்டாங்க”

   

“அவள் பவித்ராவோடதான் ஊருக்கு வந்தா” என தேவா சொல்ல உடனே ரிக்கார்டு பார்த்தார். கீர்த்தனாவைப் பற்றி பார்த்து தேவாவிடம்

   

”கீர்த்தனாவோட கார்டியன் அட்ரஸ் இருக்கு கொடுக்கறேன் நேரா போய் பாருங்க” என சொல்லி அட்ரஸ் தர அதை வாங்கிக் கொண்டு பாட்டியுடன் வெளியே வந்த தேவா, காருக்குள் ஏறி முதலில் என்ன அட்ரஸ் அது என பார்க்கலானான். கொடைக்கானல் என இருக்கவே அதிர்ந்தான்.

   

”கொடைக்கானல்ன்னு போட்டிருக்கு தாமரை இப்ப என்ன செய்யலாம்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.