”எது இதுவா சரியான தீர்வு, இது தப்பும்மா”
“இல்லை ப்ளீஸ் தேவா எனக்கு வேணும், இல்லைன்னா நான் செத்துடுவேன்” என அவள் அழ ஆரம்பிக்க
”செத்துடு” என்றான் தேவா. அதைக்கேட்டு இன்னும் வருந்தியவள் அங்கிருந்த குத்துவிளக்கை எடுக்க தேவா அசராமல் பார்த்துக் காண்டிருந்தான்
”இந்த ட்ராமாவை நிப்பாட்டு, இது ஒண்ணும் சினிமா கிடையாது” என சொல்லும் போதே அவள் வயிற்றில் குற்றிக்கொள்ள செல்ல உடனே அவளை தடுத்தார்கள் அனைவரும்.
10 நிமிடம் பேசியும் சரண்யா அங்கிருந்து செல்லாமல் இருக்கவே அதிர்ந்த அனைவரும் என்ன செய்வது என ஆளுக்கு ஆள் பேசலானார்கள். சரண்யாவிற்காக அவளது தாத்தா வைத்தியின் காலில் விழ அவருக்கு கஷ்டமாகிப் போனது. வேறு வழியின்றி தேவாவிடம் பேசி சமாதானம் செய்யப் போக கீர்த்தனா எழுந்துக் கொண்டாள்.
அவளை தாமரை சமாதானம் செய்ய இதோ அதோ என முகூர்த்த நேரத்தின் கடைசி சில நிமிடத்தில் இரு பெண்களுக்கும் தாலி கட்டினான் தேவா. முதலில் கீர்த்தனா அடுத்து சரண்யா.
இரு மனைவிகளால் தேவாவிற்கு பிரச்சனைகள் வருமா? தாமரை யாருக்கு துணையாக நிற்பார்?? கீர்த்தனாவின் நிலைமை என்ன??? சரண்யாவின் திட்டம் என்ன????
இடைவேளை
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...